திருப்பூர், செப். 27 – மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் இந்தி யாவில் தொழிலாளர், விவசாயிகள் வாழ்வு கடுமையாக சரிவைச் சந்தித் துள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் கூறினார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வரும் 10 நாள் தொடர் வகுப்பில் கடந்த வெள்ளியன்று வீதிக்குத் தள்ளப்படும் விவசாயி, தொழிலாளர் வாழ்வு என்ற தலைப்பில் டி.ரவீந்திரன் பேசிய தாவது: நாடு விடுதலை பெற்ற பிறகு முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு 1980களில் பொதுத்துறை நிறுவனங்கள் கைவிடப்படும் போக்கு தொடங்கியது. உலகமயம், தனியார்ம யம், தாராளமயம் என்ற கொள்கை களை அமல்படுத்திய பிறகு இந்தியா வின் விவசாயம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. குறிப்பாக மோடி ஆட் சிக் காலத்தில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கும், 17ஆம் ஆண்டுக்கும் இடையே ஏறத் தாழ 49ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலை கள் மூடப்பட்டு, 5 லட்சத்து 19ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள் ளனர். சிறு, குறு தொழில்கள் நெருக் கடிக்கு உள்ளாக்கப்பட்டதுடன், பெரும் தொழில்கள் ஏகபோக கார்ப்ரேட் நிறுவ னங்களின் வசம் சென்றதால் கோடிக் கணக்கானவர்கள் வேலையிழந்துள் ளனர். முறைசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு இல்லாதவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். நிரந்தர வேலை வாய்ப்பு என்பது கைவிடப்பட்டு விட் டது. சுமங்கலி திட்டம், கேம்ப் கூலி, பணி யில் அமர்த்து, துரத்து என்ற நிலை ஏற்ப டுத்தப்பட்டு தொழிலாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். இந்தியா வில் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் இளைஞர்கள் ‘வேலைச்சந்தை’க்கு வரு கின்றனர். ஆனால் வேலைவாய்ப்பு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இதற்கு மாற்றுக் கொள்கை ஆட்சி யாளர்களிடம் இல்லை. அதேபோல் விவசாய உற்பத்தி யைப் பொருத்தவரை 1951ஆம் ஆண்டு இந்தியாவில் 5 கோடி டன் உணவு தானி யம் உற்பத்தி செய்யப்பட்டது.
அது தற் போது 33 கோடியை 53 லட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது. பசுமைப் புரட்சி போன்ற காரணங்களால் விவசாய உற் பத்தி பெருகியிருந்தாலும் விவசாயி கள் வாழ்வில் அது வளமையை ஏற்படுத் தவில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் மட்டும் 4 லட்சம் பேர் தற்கொலை செய் துள்ளனர். அதில் 1 லட்சத்து 7ஆயிரம் பேர் விவசாயிகள். 2 லட்சத்து 78 ஆயி ரம் பேர் தினக்கூலி தொழிலாளர்கள். விவசாயம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள னர். டில்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டம் மோடி அரசு கொண்டு வந்த கார்ப்ரேட் நிறுவனங்க ளுக்கு சாதகமான மூன்று வேளாண் சட் டங்களைக் கைவிடச் செய்தது. எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்து ரைப்படி வேளாண் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் விளைபொருட்களுக்கு கட்டுப்படி யான விலை, நீர்ப்பாசனம், உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வழங்க வேண் டும். விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட ஆட்சியாளர்களின் கொள்கைகளில் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும். கேரள இடது ஜனநா யக முன்னணி அரசு இதற்கான முறை யில் கொள்கைகளை அங்கு அமல்ப டுத்தி வருகிறது. அதன் விளைவாக அடுத்த 25 ஆண்டுகளில் கேரளாவில் பெரும்பான்மை தொழிலாளர்கள் நடுத் தர வருவாய் பிரிவினராக வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து விடுவார்கள். அத்த கைய மாற்றத்தை நாடு முழுவதும் ஏற்ப டுத்த வேண்டும்.இவ்வாறு டி.ரவீந்தி ரன் கூறினார்.