districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விவசாய நிலத்தில் திடீர் தீ

நாமக்கல், மார்ச் 29- பரமத்திவேலூர் பகுதியில் அறுவடைக்காலம் முடிந்து  நிலத்தை உழுது சமன் செய்ய இருந்த நிலையில், விவசாய  நிலத்தில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா இரும்புப் பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய  நிலங்கள் உள்ளன. இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க் கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த வேலு சாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின்  காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.  இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின்  வேகம் காரணமாக தீ அருகில் இருந்த விவசாய நிலங் களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும்  தீயை அணைக்க முடியவில்லை.  இதுகுறித்து, திருச்செங்கோடு தீயணைப்பு துறையின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத் தனர்.  இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் அடையாளம் தெரியாத  நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மேம்பாலம் மூடல்: போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சேலம், மார்ச் 29- சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதி மூடப்பட்ட தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். சேலம் மாநகராட்சியின் மையப் பகுதியாக விளங்குவது  அழகாபுரம். இப்பகுதியில் இரண்டு அடுக்கு மேம்பாலம்  உள்ளது, இந்த ஈரடுக்கு மேம்பாலம் நிறைவடையும்  இடத்தில், சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு  செல்லும் மேட்டூர் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இந்த  உடைப்பை சரி செய்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக  மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத னால் புதனன்று மேம்பாலத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அஸ்தம் பட்டி சாரதா கல்லூரி, ராமகிருஷ்ணா சாலை வரை அரசு  பள்ளி வாகனங்கள், மாநகர பேருந்துகள், கார், இரு சக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள்  கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. மேலும், அவ் வழியாக வந்த ஆம்புலன்ஸ், போக்குவரத்து நெரிசலில்  சிக்கி 20 நிமிடங்களுக்கு மேலாக காத்திருக்கிறது. இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும், குறிப்பிட்ட  நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். குடிநீர் குழாய்  சரி செய்யும் பணியின் காரணமாக மாநகரத்தின் மையப்பகுதி யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.

வரி செலுத்தாதவர்கள் பட்டியல் பொது வெளியில் பகிரப்படும்

கோவை மாநகராட்சி மிரட்டல் அறிவிப்பால் சர்ச்சை

கோவை, மார்ச் 29 - வரி செலுத்தாதவர்கள் பெயர்கள் பொது தளங்களில்  வெளியிடப்படும் என மிரட்டும் அறிக்கையை கோவை மாநக ராட்சி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாநகராட்சியில் தற்போது பல்வேறு இடங் களில் வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி  நிர்வாகம் வரி வசூல் செய்து வருகிறது. மேலும், வரி செலுத் தாமல் இருக்கும் கடைகளுக்கும் வணிக வளாகங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பி வருகிறது. எனினும்  வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் பல்வேறு கடை களுக்கும் வணிக வளாகங்களுக்கும் மாநகராட்சி அதி காரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், வரி செலுத்தாமல் அதிகமான நிலுவைத்  தொகை வைத்துள்ள நபர்களின் பெயர் தினசரி நாளிதழ் களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என  மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் வெளி யிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர்  கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் அதிக தொகை  நிலுவை வைத்துள்ளவர்கள் வருகின்ற 31ஆம் தேதிக்குள்  நிலுவைத் தொகைகளை செலுத்தி விட வேண்டும் எனவும்,  தவறும் பட்சத்தில் அதிகமான நிலுவைத் தொகை வைத்துள்ள  நபர்களின் பெயர் நிலுவைத் தொகை உள்ளிட்ட விவரங் களை தினசரி நாளிதழ்களிலும் மற்றும் சமூக வலைத்தளங் களிலும் வெளியிடப்படும் என இறுதியாக அறிவிக்கப்படு கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநராட்சி ஆணையளாரின் இந்தஅறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், கோடிக் கணக்கான ரூபாய் வரி பாக்கியை வைத்திருக்கும் பெரு  நிறுவனங்களின் பட்டியலை கோவை மாநராட்சி தைரியமாக  வெளியிடுமா அல்லது எளிய மக்களின் பட்டியலை மட்டும் வெளியிடுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குளிர் பதன கிடங்கு திறப்பு: 2 ஆயிரம் டன் புளி இருப்பு

தருமபுரி, மார்ச் 29- பாப்பாரப்பட்டியில் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன குளிர் பதன கிடங்கு திறக்கப்பட்டு, 2 ஆயிரம் டன் புளி இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட புளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் புளி கொள்முதல் செய்து அதனை பதப்படுத்தி குளிர்பதன கிடங்குகளில் இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த புளி பதப்படுத்தும் தொழிலில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில், பாப்பாரப்பட்டி பகுதியில் அரசு சார்பில் குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் புளி உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் பழைய பாப்பாரப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகருடன் கூடிய குளிர் பதன கிடங்கு கட்டப்பட்டது. 2 தளங்களுடன் அதிநவீன குளிர் சாதனங்களுடன் பாதுகாப்பான கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் டன் புளி மூட்டைகள் இருப்பு வைக்கும் வகையில் இந்த கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிவர்த்தனை கூடம், அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன குளிர்பதன கிடங்கு திறக்கப்பட்டு புளி உற்பத்தியாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநரும், தனி அலுவலருமான பாலசுப்பிரமணியன், செயலாளர் ரவி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், பாப்பாரப்பட்டி பகுதி புளி வணிகர்கள் சங்க தலைவர் சின்னசாமி, செயலாளர் கணபதி, பொருளாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள், புளி உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்ட பொருளாதார கடனுதவி

கோவை, மார்ச் 29-  தொழில்முனைவோர்கள் மேம் பாட்டு திட்டத்தின் கீழ், பொருளா தார கடனுதவி உள்ளிட்ட திட்டத் தின் அடிப்படையில், 2022-23 ஆண்டில் 301 நபர்களுக்கு ரூ.203  கோடி மானியத்துடன் கூடிய ரூ. 17 கோடி கடனுதவி வழங்கப்பட் டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி தெரிவித் துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் அலு வலக செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் பயன்பெறும் வகையில்  தாட்கோ மூலம் பல்வேறு பொரு ளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  இதில், நிலம் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 30 சதவிகிதம்  மானியம் அல்லது அதிகபட்சமாக  ரூ.225 லட்சம் வரை மானியத் துடன் கூடிய கடனுதவியும், ஆதி திராவிடர் மக்களுக்கு நில வளம் மேம்படுத்துதல், பம்பு செட் அமைத்தல், சொட்டு நீர் பாசனம் மற்றும் சுழல் முறை நீர் பாசனம் அமைத்தல் ஆகியவற்றிற்கு மானி யத்துடன் கூடிய கடன் உதவியும் அளிக்கப்பட்டு வருகின்றது.  தொழில் முனைவோர் திட்டத் தின் கீழ் கடனுதவி, இளைஞர் களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மகளிர் கடனுதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கோவை மாவட்டத்தில் தாட் கோ மூலம் (2021-2022) ஆண்டில்  தொழில் முனைவோர் மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 38 நபர்களுக்கு ரூ.86,96 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.223 கோடி கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின வகுப்பைச் சார்ந்த 34 நபர் களுக்கு ரூ.58.36 லட்சம் மானியத் துடன் கூடிய ரூ.187 கோடி கடனு தவியும், மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கான பொருளாதார கடனு தவித் திட்டத்தின் கீழ் ஆதி திரா விடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 300 மகளிர் சுய  உதவிக் குழுக்களுக்கு ரூ.75 லட்சம்  மானியத்துடன் கூடிய ரூ.2.50 கோடி  கடனுதவியும் என மொத்தம் 432  நபர்களுக்கு ரூ.198 கோடி மானி யத்துடன் கூடிய ரூ660 கோடி கடனு தவி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று இதர கடனுதவி திட்டத் தின் கீழ் மொத்தம் 3971 நபர் களுக்கு ரூ203 கோடி மானியத் துடன் கூடிய ரூ57 கோடி கட னுதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் பள்ளி வாகனம் மோதி பெண் பலி; உறவினர்கள் போராட்டம்

திருப்பூர், மார்ச் 29 - திருப்பூரில் குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பிச் சென்ற பெண் மீது தனியார் பள்ளி  வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயி ரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் அங்கு போராட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர், பாராப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா.  இவர் புதனன்று காலை தன் குழந்தையை பள்ளியில் விடுவ தற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார். குழந்தை களை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிச் சென்றார். திருப்பூர்  கூலிபாளையம் நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில் உள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி அருகே  வந்தபோது, அந்த பள்ளியின் வாகனம் அவரது இருசக்கர  வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் சடலத்தை மீட்கும்  பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் பலியான ராதா வின் உறவினர்கள் அங்கு ஒன்று திரண்டு அவரது சடலத்தைப்  பார்த்து கதறி அழுதனர். உயிரிழந்த ராதா குடும்பத்தாருக்கு  உரிய நியாயம் வேண்டும், விபத்தை ஏற்படுத்திய வாகன  ஓட்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியு றுத்தி, ராதாவின் சடலத்தை அப்புறப்படுத்த விடாமல் போலீ சாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்ப குதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலைத் தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர், மார்ச் 29 -  திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் குடியி ருப்புப் பகுதிகளுக்கு போக்குவரத்தை பாதிக்கும் வகையில்  உள்ள சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி பொது மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் சாலையில் புதுரோடு பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும்  மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி.என்.நகர் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வரு கின்றனர். தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட் டுள்ள தாராபுரம் சாலையின் மையத்தில் தடுப்புகள் அமைக் கப்பட்டு உள்ளன. இந்த தடுப்புகள் இடைவெளியின்றி இருப் பதால் மேற்கண்ட குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் சாலை யைக் கடப்பதற்கு நீண்ட தூரம் சுற்றிச் சென்று வர வேண்டிய  நிலை இருக்கிறது.  மேலும் பேருந்துகளில் வந்து இறங்கும்  பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்ற னர். குறிப்பாக பெண்கள், முதியவர்களுக்கு மிகவும் சிர மத்தை ஏற்படுத்துவதாக இந்த சாலைத் தடுப்பு உள்ளது. எனவே சாலையின் மையத்தில் உள்ள தடுப்பை அகற்றி  இருபுறமும் கடந்து செல்வதற்கு வசதி செய்து தர வேண்டும்  என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் புதனன்று காலை சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த நல்லூர் போலீ சார் பேச்சுவார்த்தை நடத்தி மைய தடுப்புகளை அகற்று வதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

உணவுப் பொருள் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர், மார்ச் 29 - திருப்பூர் மாவட்ட ரேசன் கடைகளில் உணவுப் பொருள்  கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் எச்சரிக்கை விடுத் துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட கண்கா ணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை யில் திங்களன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட வழங்கல் அலுவலர் மகராஜ், கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் சீனிவாசன், துணைப் பதிவாளர்  பழனிச்சாமி, த.நா.வாணிப கழக மேலாளர் சக்திவேல் உள் ளிட்டோர் பங்கேற்றனர். வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும்  உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் காதர்பாட்சா தாக்கல் செய்த புகாரின் பேரில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருவில் ரேசன் அரிசி வாங்குபவர்களை ஃபுட்செல் காவல்  அதிகாரிகள் கண்டு பிடித்து 18 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. ரேசன் கடையில் உபரி அரிசி கணக்கில் காட்டப் படாமல் வைத்துள்ளதை கண்டு பிடித்து அபராதம் விதிக்கப் பட்டது. மூட்டைகளிள் தரையின் ஈரக்கசிவு தாக்காமல் இருக்க  900 மீட்டர் ஈரம் உறிஞ்சும் விரிப்புகள் அரசு தரப்பில் ரேசன்  கடைகளுகக்கு வழங்கப்பட்டுள்ளன என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இம்மாத முறையீட்டில் ரேசன் அரிசி பதுக் கலுக்கு உடைந்தையாக செயல்படும் ஊழியர்கள், கள்ளச் சந் தைக்காரர்கள் உரியமுறையில் தண்டிக்க வேண்டும் என்று  கேட்கப்பட்டது. சரியான தகவல் அளிக்கும் பட்சத்தில் குண் டர் தடுப்பு சட்டம் பாயும் என்று மாவட்ட ஆட்சியர் வினீத்  உறுதியளித்தார் என்று காதர்பாட்சா தெரிவித்தார்.

2 துணை ஆணையர்கள் திருப்பூரில் நியமனம்

திருப்பூர், மார்ச் 29 - திருப்பூர் மாநகராட்சி யில் புதியதாக தோற்றுவிக் கப்பட்ட இரண்டு துணை  ஆணையாளர் பணியிடத் தில் ஓசூர் மாநகராட்சியில் ஆணையாளராக பணிபு ரிந்து வந்த கே.பாலசுப்பிரம ணியன், சேலம் நகராட்சிக ளின் மண்டல நிர்வாக இயக் குநராக பணிபுரிந்து வந்த ஏ. சுல்தானா இருவர் நியமிக்கப் பட்டுள்ளனர். துணை  ஆணையர் கே.பாலசுப்பிரம ணியன் திங்களன்றும், துணை ஆணையர் ஏ.சுல் தானா செவ்வாயன்றும் பணி யில் சேர்ந்து கொண்டனர்.

காட்டுயானைகளால் பயிர்கள் சேதம் வாழ்வதா? சாவதா?  விவசாயிகள் வேதனை

தருமபுரி, மார்ச் 29- மாரண்டஅள்ளி அருகே காட்டுயானைகளால் பயிர் கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள வனத் திலிருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கெங்க பாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் புகுந்தது. இதைய டுத்து அங்கிருந்த விளை நிலங்களுக்குள் புகுந்த யானை கள், விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, நெல், தக்காளி உள் ளிட்ட பயிர்களை உண்டும், மிதித்தும் சேதபடுத்தி சென்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடன் வாங்கி முத லீடு செய்து அரும்பாடுபட்டு உழைத்து தயார் செய்து வந்த பயிர்களை, யானைகள் இப்படி சேதப்படுத்தியிருப்பது, லட்ச கணக்கிலான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருகிறது. யானை களால் மனிதர்களுக்கும், மனிதர்களால் யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் போது மட்டும் விரைந்து வரும் அதிகாரி கள், பயிர்கள் யானைகளால் சேதபடுத்தியிருப்பதை எட்டி கூட பார்ப்பதில்லை. யானைகளை தாங்கள் எப்படி விரட்டி யடிக்க முடியும். வாழ்வதா? சாவதா? என்று தெரிய வில்லை. எனவே, விளைநிலங்களில் யானைகள் புகாதவாறு வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வனத்துறை யும், அரசும் முன்வர வேண்டும், என்றனர்.

பழங்குடியின நபர் மர்ம மரணம்

உதகை, மார்ச் 29- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள குஞ்சப் பனை வனப்பகுதியில் தலை, கழுத்து பகுதிகளில் வெட்டு  காயங்களுடன் பழங்குடியின நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்ப வம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது குஞ்சப்பனை இருளர் பழங்குடி யின கிராமம். இப்பகுதியில் வசித்து வந்த ராஜ் என்ற நபர் வழக்கம் போல வீட்டிலிருந்து, தனது தோட்டத்திற்கு பணிக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர்கள் அவரை தேடி பார்த்துள்ளனர். மலை கிராமம் என்பதால் கிராமப்புற பகுதிகளில் தேடி  பார்த்தும் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு ஏதேனும் சென்று  உள்ளாரா? என தேடி பார்த்துள்ளனர். யாரும் பார்க்கவில்லை என கூறிய நிலையில், மீண்டும் கிராம மக்கள் உதவியுடன் விடிய விடிய தேடி பார்த்துள்ளனர். அப்போது அதிகாலை  நேரத்தில் அவரது தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது ராஜ், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் வெட்டுபட்ட நிலையில் பலத்த இரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கிராம மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஞ்சப்பனை வனப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற் றுள்ள நிலையில், காவல் நிலைய எல்லையானது மேட்டுப்பா ளையத்திற்கு சேரும் என்பதால், போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருளர் பழங்குடியின வகுப்பை சேர்ந்த நபர் வனப்பகுதியில் வெட் டுக்காயங்களுடன் சடலமாக இறந்து கிடந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு மாணவர்களின் விவரங்கள் கசிவு?

கோவை, மார்ச் 29- நீட் தேர்வு மாணவர்களின் விவரங்கள் கசியப்பட்டுள்ளதாகக்கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர் விற்கு பல்வேறு மாணவர்கள் ஒன்றிய அரசின்  இணையதள பக்கத்தில் அவர்களது விவரங் களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், அந்த தகவல்கள் கசியப்பட்டு, சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு தனியார் இடைக்கால பயிற்சி நிறுவனங்களும் பெற்றோர்களை வணிகமய மாக்கும் எண்ணத்தோடு கட்டாயப்படுத்து கின்றனர். எனவே, ஒன்றிய அரசின் நீட் தேர்வு வலைதளத்தில் பதிவு செய்யப் பட்ட தகவல்களை சட்டத்திற்கு புறம்பாக கசிய செய்த அதிகாரிகள் மீதும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கி ரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா  ஜெயக்குமார் தலைமையில், கோவை மாந கர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் மயூரா ஜெயக்குமார் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ஒன்றிய அரசினு டைய நீட் தேர்வுத்துறை, நடப்பாண்டில் மிகப் பெரிய சைபர் ஊழலில் ஈடுபட்டுள்ளது. சமீப காலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒன்றிய அரசின் வலைத்தளத்தில் அவர்க ளுடைய தகவலை பதிவேற்றிய நிலையில், அந்த தனிப்பட்ட தகவல்களை நீட் தேர்வு  துறை தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விட்டுள்ளது. இது சட்டப்படி குற்றமாகும். தற் போது இந்த தகவல்கள் கசியப்பட்டு தனி யார் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கட்டாயப்படுத்தி அவர் களை மூளைச்சலவை செய்து தங்களுடைய நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வைத் தால் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கூறி பணக்கொள்ளையில் ஈடுபட்டு வரு கின்றனர். எனவே, ஒன்றிய அரசின் நீட் தேர்வு துறை அதிகாரிகள் மீதும், தனியார் பயிற்சி  மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார்.

பெண் கழுத்து அறுத்து கொலை: போலீசார் விசாரணை

அன்னூர், மார்ச் 29- அன்னூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரை கழுத்து அறுத்து கொலை செய்து, சடலத்தை சுற்ற மிளகாய்  பொடியை தூவிவிட்டு சென்ற கொலையாளி களை காவல் துறையினர் தேடி வருகின்ற னர். கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த கரைப்பாளையம் புதுரைச் சேர்ந்தவர் சுப்பிர மணி (54). இவரது மனைவி தங்கமணி. இவர் களது பிள்ளைகளுக்கு திருமணமான நிலை யில் இருவரும் தனியாக வசித்து வருகின்ற னர். இந்நிலையில், சுப்பிரமணி சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் சமையலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் தங்கமணி சடல மாக கிடந்துள்ளார். இதையடுத்து சுப்பிரமணி யின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக் கத்தினர், இதுகுறித்து அன்னூர் காவல் நிலை யத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவி யுடன் தடயங்களை சேகரித்தனர். அப்போது கொலையாளிகள் வீட்டில் இருந்து பணம்,  நகை என எதையும் திருடிச் செல்லவில்லை என்பதும், தடயத்தை மறைக்க உடலை சுற்றி லும் மிளகாய் பொடி தூவியதும் தெரியவந் தது. இதன்பின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்ப வம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை யாளிகள் யார்? கொலைக்கான நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணையை முடுக்கியுள்ளனர்.

சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்த கார்

சூலூர், மார்ச் 29- திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை சுவற் றில் மோதி விபத்துக்குள்ளானது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அரசு மருத்துவ மனைக்கு எதிர்ப்புறமாக பேன்சி மற்றும் பேக்கரி உள்ளது. திருச்சி சாலையை ஒட்டியுள்ள இந்த கடையில் கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து கடையின் முன்புற சுவற்றில் மோதி  விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த திருப் பூர் மாவட்டம், குண்டடம் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்ப வர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதுகுறித்து சூலூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும்  நிலையில் கார் அதிவேகமாக வந்து சுவற்றில் மோதி நிற்கும்  கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் திறப்பு

ஈரோடு, மார்ச் 29- ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக விளங்குவது பவானி சாகர் அணையாகும். கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டி லும் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவ தால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்நி லையில், கீழ்பவானி பாசனத் திற்காக புதனன்று முதல்  பவானிசாகர் அணையிலி ருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இதேபோல காளிங்கரா யன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக 200 கன அடி என மொத்தம் 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கேத்தனூரில் பட்ஜெட் எதிர்ப்பு: சிபிஎம் பிரச்சாரம்

பாரதிய ஜனதா கட்சி குண்டர்கள் ரகளை

திருப்பூர், மார்ச் 29- ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் மக் கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து கேத்த னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடத்தினர். இதில் பாஜக அரசின் மக்கள் விரோத நடவ டிக்கைகளை பட்டியலிட்டதைப் பொறுக்க  முடியாத பாஜக குண்டர்கள், பிரச்சாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் அங்குவந்து கூக்குரல் எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். பாஜக குண்டர்களின் எதிர்ப்பையும் மீறி பிரச் சார இயக்கம் வெற்றிகரமாக நடத்தப்பட் டது. ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட் சாமா னிய மக்களுக்கு சுமை ஏற்படுத்துவதாகவும், கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைப்பதாகவும், பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கு வதாகும் உள்ளது. இந்த பட்ஜெட்டை அம்ப லப்படுத்தி மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சார இயக்கம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்தது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த திங்கள், செவ் வாய் இரு தினங்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, பொங்கலூர் ஒன்றி யத்துக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாயன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் பல் லடம் - உடுமலை சாலையிலுள்ள கேத்தனூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், ஒன்றிய அரசின் அலங்கோல நடவடிக்கை களை பட்டியலிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்து, பொறுக்க முடி யாமல் பாஜக குண்டர்கள் சிலர் பிரச்சாரம் நடைபெற்ற இடத்துக்கு அருகே சாலையின் நடுவில் நின்று கொண்டு கூச்சலிட்டனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்து  காவலர்கள், மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் வந்து, பாஜகவினர் பிரச்சனை செய்வதால் பேச்சை நிறுத்திக் கொள்ளும்படி கூறினர். ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மார்க்சிஸ்ட்  கட்சியினர், முறையாக அனுமதி பெற்றுத் தான் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. அவர் கள்தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். நாங் கள் அதற்காக கூட்டத்தை நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். பாஜக குண்டர்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியி னரும் மோடி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து தொடர்ந்து ஜி. சம்பத் பிரச்சாரம் செய்து பேசிக் கொண்டிருந் தார். மக்களும் ஆர்வத்துடன் திரண்டு நின்று  இந்த பிரச்சாரத்தை கவனித்து  முன்வைக்கப் பட்ட கருத்துகளை ஆமோதித்தனர். எனவே பாஜகவினர் வேறு வழியில்லாமல் ஒதுங்கிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் பாலன், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில், ரகளை செய்த பாஜகவினர் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொள்வதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.