சேலம், செப்.28- மேட்டூர் அருகே பொதுமக்களை அச்சு றுத்தி கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் வனப்பகுதியான வெள்ளக்கரட் டூர், புதுவேலமங்கலம், கருங்கரடு பகுதிக ளில் சிறுத்தை ஒன்று நடமாடி வந்தது. 40க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 20க்கும் மேற்பட்ட கோழிகளையும் வேட்டையாடிய சிறுத்தை, பகலிலேயே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந் தது. இதனால், அச்சமடைந்த கிராம மக்கள் சிறுத்தையை விரைந்து பிடிக்க வனத்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சி யர், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, வியாழ னன்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதா சிவம் தலைமையில் வருவாய்த்துறை வனத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வெள்ளியன்று கருங்கரடு வனப்பகுதிக்குள் சிறுத்தை இறந்து கிடப்ப தாகக் கூறி, சேலம் மாவட்ட வன அலுவலர் கஷாப் ஷாஷன் ரவி, மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் செல்வகுமார், கால்நடை மருத் துவர் சதாசிவம் ஆகியோர் அடங்கிய குழுவி னர் கருங்கரடு பகுதியில் ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவர் மூலம் இறந்து கிடந்த சிறுத்தையின் பிரேதத்தை பரிசோதனை செய்து அங்கேயே வனத்துறையினர் எரித் தனர். இந்நிலையில், வனத்துறையின் கட்டுப் பாட்டிலுள்ள வனப்பகுதியில் சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதா? என சந்தேகங்களை எழுப்பியுள்ளது.