“கடல் போல..” என்கிற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒருவ ரான தோழர் கே.தங்கவேல் வாழ்க்கை பற்றிய காம்ரேட் டாக் கீஸ் தயாரித்த ஆவணப்படம் திருப்பூரில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பேசிய மதிமுக மாநகர் மாவட்டச் ெயலாளர் ஆர்.நாகராஜ் எம்.சி., கூறுகை யில், நாங்கள் சிறுவர்களாக பனி யன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற பொழுது எங்களுக்கு போனஸ் கிடைக்குமா என்று சந்தேகம் இருந்தது. சிஐடியு அலுவலகத்திற்கு சென்று தோழர் தங்கவேலிடம் இது பற்றி கேட்பது என்று முடிவு செய்து அங்கு போனோம். வாசலில் நின்று கொண் டிருந்த தங்கவேல், எங்களிடம் என்ன விஷயம் என்று கேட்டார். நாங்கள் போனஸ் பெற முடியுமா என்று கேட் டோம். உடனடியாக நாங்கள் வேலை செய்யும் கம்பெ னியை தொடர்பு கொண்டு இந்த இளம் தொழிலாளர்க ளுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று தொழிற்சங் கத்தின் சார்பில் வலியுறுத்தினார். எங்களுக்கு உடனடி யாக போனஸ் கிடைத்தது. எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. தீபாவளி முடிந்து நாங்கள் வந்தபோது, தோழர் தங்கவேல், தீபாவளி கொண்டாடினீர்களா? என்று கேட் டார். வேறு எதுவும் சொல்லவில்லை. நாங்களாக சங்கத் திற்கு சந்தா பணம் தருகிறோம் என்று சொன்னோம். உட னடியாக ரசீது எழுதிக் கொடுத்தார். ஒருவருக்கு இரண்டு ரூபாய் போதும் என்று கேட்டு 27 பேரிடம் 54 ரூபாய் சந்தா பெற்றுக் கொண்டார். அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போதும் தொழிற்சங்க தலைவராக பார்த்த அதே தங்க வேல் எந்த மாற்றமும் இன்றி மிக இயல்பாக எளிமையாக இருந்தார். காலை நடை பயிற்சி செய்து விட்டு சில நேரம் தாமதமானால் பேருந்தில் திரும்பி வருவார். ஒருமுறை அப்படி வரும் பொழுது, அவர் பயண சீட்டு வாங்குகிறாரா என்று நான் பார்த்தேன். அவர் பணம் கொடுத்து பயண ச் சீட்டு வாங்கினார். இவரை போய் நாம் சந்தேகப்பட்டு விட் டோமே? என்ற குற்ற உணர்ச்சியில் நான் குறுகிப் போனேன். தோழர் தங்கவேல் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண் டும், என்றார் மனம் நெகிழ்ந்து தழுதழுத்த குரலில்...