அவிநாசி, மே.28- அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் திருட்டு சம்பந்தமாக, இந்து முன்னணி ஆர்ப்பாட்டத் திற்கு ஓபிஎஸ் அணியினர் ஆதரவாக வழங்கிய நோட்டீஸை வாங்க மறுத்துடன் சாலையில் வீசி சென்றனர். அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சில தினங்களுக்கு முன்பாக திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதன் குற்றவாளியை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இருப்பினும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இச் சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி கள், இந்து முன்னணியின் செயல்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்தனர். ஆனால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்து முன்னணியினர், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் முன் பிருந்து பேரணியாக செல்ல இருந்தனர். அப் போது ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் நோட்டீஸ் கொடுத்தனர். இதனை கண்ட இந்து முன்னணி நிர்வாகிகள், யாரும் நோட்டீஸ் வாங்காதீர்கள் என கூறினர். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணியினர், நோட் டீஸை வாங்க மறுத்துடன், வாங்கிய நோட் டீஸை சாலையில் வீசி சென்றனர். இதனைக் கண்ட ஓபிஎஸ் அணியினர் நோட்டீஸ் அளிப்பதை நிறுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிர மணி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி யினர் தங்களுக்கு ஆதரவாக நோட்டீஸ் வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்தார். இதனையறிந்த அவிநாசி பொதுமக்கள், முதலில் நோட்டீஸை வாங்க மறுப்பு, அடுத்த நாள் பாராட்டு என பகடி செய்து வருகின் றனர்.