districts

img

பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திடுக

ஈரோடு, ஜூலை 2- தேர்தல் கால வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த கோரி அரசு ஊழியர் கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் வட்டாட்சியர்  அலுவலகம் முன் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய  பென்சன் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். 21 மாத கால நிலு வைத் தொகை, முடக்கப்பட்ட அக விலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர்  விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை  வழங்கிட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ச.விஜயம னோகரன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர்  மு.சீனிவாசன் சிறப்புரையாற்றி னார். துறைவாரியான சங்க நிர்வா கிகள், திரளான அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட னர். இதேபோன்று, நம்பியூர் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நம்பியூர்  அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.  இதில் திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.  தருமபுரி  இதேபோன்று, தருமபுரி மாவட் டம் முழுவதும் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை முன்னாள் மாவட்ட செயலா ளர் ஏ.சேகர் ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் கே.புக ழேந்தி, மாநிலசெயற்குழு உறுப்பி னர் முருகன் வேளாண்மை அமைச் சுத்துறை பணியாளர் சங்க மாவட்டத்  தலைவர் ஜெயவேல் சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.காவேரி ஆகியோர்  கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். இதேபோன்று, பென்னாகரம், நல்லாம்பள்ளி, காரிமங்கலம், பாப் பிரெட்டிபட்டி, அரூர், பாலக்கோடு  உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், திரளான  அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.  சேலம் இதேபோன்று, சேலம் மாவட் டத்தில் உள்ள அனைத்து வட்டக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அஸ்தம்பட்டி தாலுக்கா  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் வெ. அர்த்தநாரி  தலைமை ஏற்றார். இதில் மாவட்ட துணைத் தலைவர் ராணி, இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, சேலம் வட்டக்கிளை தலைவர் முருகப்பெருமாள், தமிழ்நாடு அரசு  அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், வட்டக்கிளை பொருளாளர் சர வணன் ஆகியோர் பங்கேற்றனர். ஓமலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர்  ந.திருவேரங்கன் வாழப்பாடி வட் டக்கிளையிலும் பங்கேற்றனர்.