மதுரை, ஜூலை 13- மதுரையில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங் கம் 50 ஆவது பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சி ஜூலை - 13, சனிக் கிழமை அன்று மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி, தொல்காப் பியர் அரங்கில் சிறப்பாக நடை பெற்றது. காலை 11 மணிக்கு, ம.கா.பல்கலை கல்லூரி வளாகத்தில் பொன்விழா நிகழ்வினை ஒட்டி அமைக்கப்பட்டி ருந்த கவிதைக் கண்காட்சி, முற்போக் குத் தமிழ்மரபுக் கண்காட்சி, தமுஎகச படைப்பாளர்களின் படைப்புகள் கண் காட்சி, தமுஎகச வரலாற்றுக் கண் காட்சி ஆகிய கண்காட்சிகளை தமு எகச தலைவர்கள் மயிலை பாலு, மலர் விழி ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக. தமுஎகச உருவாக வித்திட்ட மதுரை திடீர்நகரில் உள்ள மோட்டார் தொழிலாளர் சங்க அலு வலகத்தில் தியாகி மதுரகவி பாஸ்கர தாஸ் நகரில் இருந்து பொன்விழா ஆண்டு துவக்க சுடரேந்தல் நிகழ்ச்சி ஆர்.நீலா தலைமையில் நடைபெற் றது. சுடரை சங்கத்தின் முன்னோடி எஸ்.ஏ.பெருமாள் எடுத்துக் கொடுத் தார். அரசு போக்குவரத்து மதுரைத் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலா ளர் ஏ.கனகசுந்தர் வாழ்த்தி பேசினார். அதனைத் தொடர்ந்து தமுக்கம் மைதானம் அருகில் உள்ள தமி ழன்னை சிலைக்கு தமுஎகச மூத்த தோழர் முன்னாள் பொருளாளர் தி. வரதராஜன், சங்கரதாஸ் சுவாமி சிலைக்கு நாடக இயக்குநர், ஆசிரியர் பிரளயன், அவுட் போஸ்ட் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ராம சந்திரன், அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு எழுத்தாளர் உதயஷங்கர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை யணிவித்தார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தொல்காப்பியர் அரங்கில் தமுஎகச சுடரைத் தோழர் சிகரம் ச. செந்தில்நாதன் பெற்றுக் கொண்டார். முன்னோடிகளுக்கு மரியாதை தொடர்ந்து அமைப்பைத் தொடங் கிய முன்னோடிகளுக்கு மரியாதை செய்தல் நிகழ்ச்சி கவிஞர் நந்தலாலா தலைமையில் நடைபெற்றது. தமுஎகச மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஸ்ரீரசா வரவேற்புரையாற்றினார். மூத்த முன்னோடிகள் எஸ்.ஏ.பெரு மாள், சிகரம் ச.செந்தில்நாதன், தி.வரத ராசன், கவிஞர் தணிகைச் செல்வன், நாகை பாலா, இளங்கோவன், மோக னச்சந்திரன் ஆகியோர் சிறப்பிக்கப் பட்டனர். இந்த நிகழ்வை கவிஞர் லட்சுமிகாந்தன் ஒருங்கிணைத்தார்.
கருத்தரங்கம்
பின்னர் பொன்விழா கருத்தரங்கம் அமர்வுகள் துவங்கின. முதலாவது அமர்வில் “அமைப்பாக்கத்தின் வர லாறு” என்ற தலைப்பில், உமா தலை மையில், கே.வேலாயுதம் உரையாற்றி னார். இரண்டாவது அமர்வில் “கருத்து லகில் தமுஎகச” என்ற தலைப்பில் பிரகதீஸ்வரன் தலைமையில் மதுக் கூர் இராமலிங்கம் உரையாற்றினார். மூன்றாவது அமர்வில் “படைப்புல கில் தமுஎகச” என்ற தலைப்பில் ஜீவ லட்சுமி தலைமையில் ச.தமிழ்ச் செல்வன் உரையாற்றினார். நான்கா வது அமர்வில் “தமுஎகச இனி” என்ற தலைப்பில் சைதை ஜெ தலைமையில் ஆதவன் தீட்சண்யா உரையாற்றினார். களப்பிரன் அமர்வு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். இந்தியத் தொழிற்சங்க மையம், தமிழ்மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச்செயலாளர் அறம் ஆகியோர் வாழ்த்திப் பேசி னார்கள். ஓவியர் வெண்புறா ஒருங்கி ணைத்த நிறைவு அமர்வில் திரைக் கலைஞர் ரோகிணி தலைமையில், சு. வெங்கடேசன் எம்.பி நிறைவு உரை யாற்றினார். நிகழ்ச்சியில் கரிசல்குயில் கிருஷ் ணசாமி, கரிசல் கருணாநிதி, அன்பு மணி, உமா அமர், மேட்டூர் வசந்தி, உடு மலை துரையரசன் ஆகியோர் பாடல் கள் இசைத்தனர். கங்கை கருங்குயில் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் நிகழ்ச்சியை வண்ணமயமாக்கின. இறுதியாக தமுஎகச புறநகர் மாவட் டச் செயலாளர் லெனின் நன்றி கூறினார்.