districts

img

உண்டியல் சேமிப்பை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுமி

கோவை, மே 12- கோவையில் பள்ளி சிறுமி ஒருவர், தனது உண்டி யல் சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொது மக்கள் தங்களால் முடிந்த நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை யேற்று கோவை பீளமேடு பிஎஸ்ஜி பள்ளியில் 2  ஆம் வகுப்பு பயிலும் 7 வயது மாணவி பிரணதிகா என்பவர், தனது உண்டியல் சேமிப்பு பணம் ஆயி ரத்து 516 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி  வைத்தார். ஆறு மாதங்களாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை மனமுவந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;