districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆமை வேக சாலைப் பணியால் பொது மக்கள் அவதி

தருமபுரி, ஜூன் 17- தருமபுரி நகராட்சி 10 வது வார்டில் உள்ள டிஎன்வி நகரில் தெருவிளக்கு, சாலைவசதி, குடிநீர் வசதி, வடி கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லா மல் இருந்தது. இந்நிலையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால்,சாலை வசதிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்த லுக்கு முன்பு துவங்கப்பட்ட பணிகள் ஆறு மாதத்தை கடந்தும் இது வரையில் பணிகள் முடியவில்லை. இத னால் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதி யடைகின்றனர். மேலும், வாகனங்களில் செல்ல முடியா மல் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் தெரு விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து, காயம் ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.  எனவே, மாவட்ட நிர்வாகம் விரைவாக பணிகளை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 17- ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடன டியாக வழங்க வலியுறுத்தி திருச்செங்கோடு பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வருடத்திற்கு மேலாக  பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர்களின் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். இஎஸ்ஐ, இபிஎஃப் போன்ற சட்டபூர்வ சலுகைகள் அமுல்ப டுத்த வேண்டும். அரசு பொது துறையான பிஎஸ்என்எல் பழுதுபார்க்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஊழியர்கள் விரோத போக்குகளை கண்டித்து இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல்யு மாவட்டத் தலைவர் பி.தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்மணி கோரிக்கை உரையாற்றினார். இதில் கிளை செயலாளர்கள் எம்.ராஜலிங்கம், வீ.பரந்தா மன், மாவட்ட உதவி தலைவர்கள் கே.ராமசாமி, லாரன்ஸ், நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, ஜூன் 17- தருமபுரி மாவட்டம் ஒகே னக்கல்லில் மீண்டும் மழை பெய்வதால் ஒகேனக்கல் லுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. ஒகேனக்கல்லில் புத னன்று 3 ஆயிரத்து 500 கன  அடியாக இருந்த நீர்வரத்து, வியாழனன்று மாலை 6  ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகே னக்கல்லில் மெயின் அருவி,  ஐந்தருவி, சினிபால்ஸ் உள் பட அனைத்து அருவிகளி லும் தண்ணீர் பெருக்கெ டுத்து கொட்டுகிறது. மேட்டூர் அணைக்கு வியாழனன்று காலை வினாடிக்கு 2 ஆயி ரத்து 597 கன அடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளி யன்று மேலும் அதிகரித் துள்ளது. வினாடிக்கு 5 ஆயி ரத்து 661 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண் ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 111.35 அடி யானது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் ஒன்றரை அடி நீர்மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

தருமபுரி - நூலகத்திற்கு உறுப்பினர் சேர்ப்பு 

தருமபுரி, ஜூன் 17- தருமபுரி அரசு கலைக்கல்லூ ரியில், மாணவர்களிடம் தருமபுரி மாவட்ட மைய நூலகத்திற்கு  உறுப்பி னர் சேர்ப்பு நடைபெற்றது. தருமபுரி, அரசு கலைக்கல்லூரி யில், இளங்கலைத் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் 56 பேர் தரும புரி மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துகொண்ட னர். இந்த உறுப்பினர் சேர்க்கையை கல்லூரி முதல்வர் முனைவர். ப.கி.கிள்ளிவளவன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட மைய நூலகத் தின் வாசகர் வட்ட தலைவர் ராஜசேக ரன்,  தமிழ்த்துறைத் தலைவர்  இரா. சங்கர், பேராசிரியர்கள் பெ.இரா ஜேந்திரன், சி.கணேசன், ப.சி.சரவ ணன், சீ.அன்பரசன், பா.குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கான உறுப்பினர் தொகையை பேராசிரியர் முனைவர்.  கு.சிவப்பிரகாசம் செலுத்தினார்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடுகட்ட நிதியுதவி

ஈரோடு, ஜூன் 17- தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழி லாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்க ளாகவே வீடு கட்டி கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.  இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் முருகே சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,   தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற  நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.  இத்தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சொந்த வீட்டுமனை வைத்திருந்தால் 300 சதுரடி அளவில் வீடு கட்ட இடவசதி இருக்க வேண்டும். இந்நிலம் அத்தொழி லாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். நில உரிமைக்கான பட்டா முறையாக பெற்றி ருக்க வேண்டும். நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4  லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். அத்தொழிலாளியின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண் டும்.  தகுதியானவர்கள் நலவாரிய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றை tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விப ரம் அறிய ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலு வலக வளாகத்தில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது 0424 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 60 ஆண்டு சிறை

திருப்பூர், ஜூன் 17– திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் எல்லைக்கு உட் பட்ட முத்துகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பூபதி (34)  என்பவர் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமியை  தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை  செய்த குற்றத்திற்காக திருப்பூர் மகளிர் நீதிமன்றம் அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு மே 26ஆம் தேதியன்று இந்த சம்ப வம் நடைபெற்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின்  தாயார் குப்பம்மாள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், அன்றைய தினமே பூபதியை கைது செய்து நீதிமன்றக் காவ லுக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் பூபதி மீது  குற்றம் நிரூபிக்கப்பட்டு வெவ்வேறு மூன்று பிரிவுகளில் தலா  20 ஆண்டுகள் வீதம் மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண் டனை விதிக்கப்பட்டது. இத்துடன் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். பாலியல் சீண்டல்: ஒருவர் கைது பல்லடம் கரைப்புதூர் பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் (27) என்பவர் சிறுமி ஒருவரிடம் கடந்த 16ஆம் தேதி பாலி யல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமி  தாயிடம் தெரிவித்தார். இதன் அடிப்படையில் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது பிரகாஷை காவலர்கள்  வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு  அனுப்பி வைத்தனர்.

ஆதார் கைரேகைப் பதிவு சிறப்பு முகாம்

திருப்பூர், ஜூன் 17- திருப்பூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதை அதிகப்படுத் துவதற்காக ஆதார் பதிவில் கைரேகைப் புதுப்பித்தல் சிறப்பு  முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி  வரை பின்வரும் இடங்களில் நடைபெறுகிறது. அவிநாசி  வட்டாட்சியர் அலுவலலகம், தாராபுரம் கோட்டாட்சியர் மற் றும் வட்டாட்சியர் அலுவலகங்கள், காங்கேயம் வட்டாட்சி யர் மற்றும் நகராட்சி அலுவலகம், வெள்ளகோவில் நகராட்சி  அலுவலகம், மடத்துக்குளம், பல்லடம் வட்டாட்சியர் அலுவ லகம் மற்றும் பல்லடம் நகராட்சி அலுவலலகம், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம், தொட்டிபாளையம் (நஞ் சப்பா நகர்) மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு வட்டாட் சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நல்லூர்  மண்டல அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மங்கலம் கிராம நிர்வாக அலுவலகம், உடுமலை வட்டாட்சியர் மற்றும்  நகராட்சி அலுவலகங்கள், ஊத்துக்குளி வட்டாட்சியர் அலு வலகம் ஆகிய 11 இடங்களில் நடைபெறும். கைரேகை பதி வாகாமல் அவதிப்படும் முதியோர், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு கைரேகைப் பதிவை புதுப்பித்து சிரமம்  இல்லாமல் ரேசன் பொருட்கள் வாங்கலாம் என்று ஆட்சி யர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சின்ன வெங்காயம்  ஏற்றுமதிக்கு ஜூன் 20ல் பயிற்சி திருப்பூர், ஜூன் 17–

திருப்பூர், ஜூன் 17– திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் மதிப்புக்  கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக விவசாயிக ளுக்கு ஜூன் 20ஆம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையினர் மூலம்  வழங்கப்படும் இந்த பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அறை எண் 20இல் அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெ றும். இக்கூட்டத்தில் விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழுக் கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்கேற்குமாறு  கோவை வேளாண்மை துணை இயக்குநர் கே.சுந்தரவடி வேலு கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலியஸ்டர் நூல் விலை உயர்வு உற்பத்தியாளர்கள் கவலை 

திருப்பூர் ஜூன் 17- திருப்பூரில், எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி  வருகின்றன. தொடர்ந்து பாலியஸ்டர் நூல் விலை உயர்ந்து  வருவதால் இந்நிறுவனங்கள் கடுமையாகப் பதிக்கப்பட் டுள்ளது.  இதுகுறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்  தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:- பருத்தி நூல் விலை  உயர்வால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.இதன் எதிரொலியாக 40 சதவீத அளவிலேயே எலாஸ்டிக்  உற்பத்தி நடைபெற்றுவருகிறது. கச்சா எண்ணெய் விலை  உயர்வு, டாலர் விலை உயர்வு போன்ற கரணங்களால் பாலி யஸ்டர் நூல் விலை சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து  வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரே  மாதத்தில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஆர்டர் வழங்கி னாலும் போதுமான அளவு பாலியஸ்டர் நூல் கிடைப்ப தில்லை.அதனால் எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடு மையாகப் பாதித்துள்ளன. மூலப்பொருள் கொள்முதலுக் கான நிதி தேவை அதிகரித்துள்ளது.எலாஸ்டிக் உற்பத்தி  செலவினம் அதிகரித்துள்ளது. தற்போதைய தொழில் சூழ லில் எலாஸ்டிக் விலையை உயர்த்த முடியாத நிலை உள் ளது.பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களோ, எலாஸ்டிக் கிற்கான தொகையை வழங்க 90 நாட்களுக்கு மேல் இழுத்த டிக்கின்றன. இது, நிதி நெருக்கடியை மேலும் அதிக ரிக்கச் செய்கிறது. முன் பணம் செலுத்தினால் மட்டுமே பாலி யஸ்டர் நூல் கிடைக்கிறது.நிலுவைத் தொகை வசூலாவ தில் உள்ள சிக்கல்களால் போதிய அளவு நூல் வாங்க  முடிவதில்லை. நெருக்கடியான இந்த சூழலில், பின்ன லாடை உற்பத்தி நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் தொகை  வழங்கினாலே போதும். எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்க ளின் நிதி நெருக்கடி பிரச்சினைகள் ஓரளவு தீரும்.இவ்வாறு  அவர் கூறினார்.

மது விற்பனை: ஐந்து பேர் கைது

திருப்பூர், ஜூன் 17 – திருப்பூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரை மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். 57 மதுபான  பாட்டில்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் சசாங்சா யின் உத்தரவுப்படி போலீ சார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதா கவும், வெள்ளிக்கிழமை அரசு அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக மதுபாட் டில்கள் விற்பனையில் ஈடு பட்ட ஐந்து பேரை கைது செய்ததாகவும் மாவட்ட காவல் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை மனைவி புகார் - கணவர் கைது

கோவை, ஜூன் 17- காரமடையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டை சேர்ந்தவர் பிரகாஷ் வரன் (42). இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ள னர். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், பிரகாஷ்வரன் அந்த இளம்பெண் ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதற்கி டையே பிரகாஷ்வரனின் மனைவி, கணவரின் செல்போனை பார்த்தபோது, அதில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அவர் சிறுமியிடம் விசாரித்தார். அப் போது சிறுமி தனக்கு நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இது குறித்து பிரகாஷ்வரனின் மனைவி துடியலூர் அனைத்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிர காஷ்வரனை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

அபாயகரமான மரங்களை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

உதகை, ஜூன் 17- அபாயகரமான முறையில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பந்தலூர் பொதுமக்கள் வலியு றுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்த அய்யன்கொல்லி யில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அய்யன்கொல்லி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள அத்திசால், பாதிரிமூலா, காரக்கொல்லி, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, கருத்தாடு, செம்பக்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக நீலகிரி மற்றும் பந்தலூர் வந்து செல்கின்றனர். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையொட்டி சாலையோரத்தில் அபாய கரமான நிலையில் ராட்சத மரங்கள் நிற்கின்றன. அதில், பட்டுப்போன மரங்களும் அடங்கும். சூறைக்காற்று வீசும் போது அந்த மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் நிலவு கிறது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆரம்ப சுகா தார நிலைய பகுதியில் ஆபத்தான நிலையில் மரங்கள் நிற்கிறது. அவற்றின் கிளைகள் மின்கம்பியில் உரசுவ தால் மின் விபத்து ஏற்படுகிறது. மேலும், சூறாவளி காற்று  வீசினால், சாய்ந்து விழும் நிலையில்தான் அந்த மரங்கள் காணப்படுகின்றன. இதனால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அங்கு சென்று வரவே அச்ச மாக உள்ளது. எனவே முன்எச்சரிக்கையாக அந்த மரங் களை வெட்டி அகற்ற வேண்டும், என கோரிக்கை விடுத் துள்ளனர்.

நீலகிரியில் அதிகப்படியான கந்துவட்டி வழக்கு

உதகை, ஜூன் 17- தமிழகத்தில் அதிகப்படியான கந்து வட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் நீலகிரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ள தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள் ளது.  தமிழ்நாடு காவல்துறை கடந்த ஜூன் 8 ஆம் தேதி முதல் கந்துவட்டி கும்பல் மீது  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அதன் படி தமிழகத்தில் 140 கந்துவட்டி தொடர் பான புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 82 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 32  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதியுள்ள புகார் மீது தீவிரமான விசாரணை நடை பெற்று வருகிறது இந்நிலையில், வியாழ னன்று நீலகிரி மாவட்டத்தில் தமிழகத்தில் அதிகமாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும், பல்வேறு கந்துவட்டியை கொடுப்பவர்கள் மீது போலீசார் கண்கா ணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரு சில கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர் கள் நீலகிரி மாவட்டத்தில் இருந்து தங்கள் வீடுகளை பூட்டி வேறு மாநிலத்தில் தஞ்ச மடைந்து உள்ளதாக போலீசார் தெரிவிக் கின்றனர். இதுசம்பந்தமாக நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவிக் கையில், நீலகிரி மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் ஏதும் இருந்தால் தைரியமாக பொதுமக்கள் காவல் துறை யிடம் தெரிவிக்கலாம், என்றார்.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு

சேலம், ஜூன் 17- ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடி யாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் புதிய  பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும்  600க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகின்றன. சேலம், கடலூர், திருச்சி, விழுப் புரம், சென்னை, மதுரை, கோவை, தரும புரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், திருச்சி சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந் துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் பயணிகள் அமர்வதற்கு இடம் இருக்காது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழலுக்கு நிற் பதற்கு கூட இடமில்லாமல் கடை உரிமை யாளர்கள் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனிடையே நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகாரின் பேரில், ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாச்ச லம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவ டிக்கை எடுத்துள்ளார். நகராட்சி குத்தகை தாரர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது கடைகளை உடனே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வழங்கி, தண்டோரா மூலம் நக ராட்சி ஊழியர்கள் எச்சரித்து வருகின்றனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் விழிப்புணர்வு தொலைக்காட்சி

கோவை, ஜூன் 17- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு தொலைக்காட்சி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வருபவர்கள் திங்கள் முதல் வெள்ளி  வரை பகல் 12 மணி முதல் 1 மணி வரை அளிக்கலாம். இந்நிலையில், மனு அளிக்க வரும் மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சிப் பெட்டி  வைக்கப்பட்டுள்ளது. அதில், குற்றங்கள் மற்றும் குழந்தை கள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சம்பந்த மான விழிப்புணர்வு காட்சிகள் வெளியிடப்படும். இந்த தொலைக்காட்சிப் பெட்டியை வெள்ளியன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத் தார்.

பெண்ணிடம் வழிப்பறி

கோவை, ஜூன் 17- கோவை மாவட்டம், சாம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பிரேமா (42). இவர், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தார். அப் போது, அங்கு இருசக்கர வாகனத்தில் 2 பேர் பிரேமா கழுத்திலிருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து தப்பி  சென்றனர். இதுகுறித்து பிரேமா பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத் தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இச் சம்பவத்தில் ஈடுபட்டவர் களை தீவிரமாக தேடி வரு கின்றனர்.