உதகை, நவ.22- உதகையில் உறைபனி சீசன் தொடங்கி யுள்ள நிலையில், செவ்வாயன்று 3 டிகிரி செல்சியசுக்கு கீழே வெப்பநிலை பதிவாகி யுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக காலநிலை மாறுபாடு காரண மாக இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவ மழை தாமதமாக தொடங்கியது. அந்த வரி சையைத் தொடர்ந்து தற்போது பனிக்கால மும் 20 நாட்கள் தாமதமாக தொடங்கி உள் ளது. கடந்த நவ.15 ஆம் தேதி முதல் திங்க ளன்று வரை நீர் பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது. மேலும், உதகையில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று முதல் உறைபனி பொழிவு தொடங்கிவிட்டது. இதன் படி உதகையில்லுள்ள தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தயம் மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து காணப்பட்டது.
இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி கொட்டி கிடக்கிறது. இதனால் பச்சை புல்வெளி மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் தோற்றம் அளிக்கிறது. கடும் பனி காரணமாக காலை யில் மைதானங்களில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்னர். இதற்கிடையே உதகையில் நிலவும் கடும் குளிரிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்கின்ற னர். இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், உதகை யில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி னாலும் தற்போது தீவிரமடைந்துள்ளது. குறைந்தபட்சம் 7 டிகிரி செல்சியஸ் அதிக பட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் செவ்வாயன்று குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. அதே சமயத்தில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 63 சதவீதமாக இருந் தது, என்றார்.