கோவை, அக்.6- காரமடை அருகே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட தேவாங்கிற்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டத்தில் மேட்டுப் பாளைம், காரமடை ஆகியவை வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளாகும். இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், காட்டு பன்றி, காட்டெருமை, மயில், முயல், தேவாங்கு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வரு கின்றன. சில சமயங்களில் சிறுத்தை, யானை ஊருக்குள் புகுந்து விடுகிறது. இவைகள் கால்நடைகளை தாக்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது. மனித - விலங்கு மோதலும் ஏற்படுகிறது. மான், மயில் ஊருக்குள் புகும்போது நாய்கள் அதனை கடித்து காயப்படுத்தி விடும். அதனை பொது மக்கள் மீட்டு சிகிச்சை அளித்து வனத் துறையிடம் ஒப்படைத்து வருகின் றனர். இந்நிலையில், அத்திகடவு முகாமில் உள்ள சிறப்பு அதிரடி படை யினர் வனப்பகுதியில் ரோந்து சென்ற னர். அப்போது அங்கு 4 வயது மதிக்கத் தக்க தேவாங்கு ஒன்று ஒரு கண் பார்வை யற்று கையில் பலத்த காயமடைந்து, ரத்தம் கொட்டியவாறு பரிதாபமாக அமர்ந்து இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறப்பு அதிரடி படை யினர் தேவாங்கை மீட்டு தண்ணீர் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கார மடை வன அலுவலர் திவ்யா தலைமை யிலான வனக்குழுவினர் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். அவர்களிடம் தேவாங்கை ஒப்படைத்தனர். வனத் துறையினர் சிகிச்சைக்காக தேவாங்கை வெள்ளியங்காடு கால்நடை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். தேவாங்கிற்கு சிகிச்சை அளித்து அதனை கண்காணித்து பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கழுகு தாக்கி தேவாங்கு காயமடைந்து இருக்கலாம் அல்லது அதனை யாராவது வேட்டை யாடும் போது காயம் அடைந்து தப்பியதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? எனவும் வனத்துறைனர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.