districts

img

சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

மேட்டுப்பாளையம், செப்.15- மேட்டுப்பாளையத்தில் விவசாயத் தோட்டத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தையை, பிடிக்கும் பணி யில் வனத்துறையினர் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் அருகே உள்ள குத்தாரிபாளையம் கிராமம், சென்னாமலை கரடு பகுதி யில் சிறுத்தையொன்று விவசாயி ஒருவ ரின் தோட்டத்தினுள் புகுந்து அங்கு  வளர்க்கப்பட்டு வரும் தோட்டத்து  நாயை வேட்டையாட முயன்ற காட்சி கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவாகியிருந் தது. மேலும், இப்பகுதியில் உள்ள தெரு  நாய்களை தேடி சிறுத்தை அடிக்கடி வரு வதை கிராம மக்கள் நேரில் கண்டுள் ளனர். கண்ணில் பட்ட சிலரை சிறுத்தை  துரத்திய சம்பவங்களும் நடந்ததால்  இதுகுறித்து சிறுமுகை வனத்துறையின ரிடம் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசா யிகள் புகாரளித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும்  அதன் காலடி தடங்களை ஆய்வு செய்த  வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை உறுதி செய்தனர். இதுகுறித்து வனத் துறை உயரதிகாரிகளுக்கு தகவல்  தெரிவித்த சிறுமுகை வனத்துறையி னர், ஞாயிறன்று அச்சிறுத்தையை பிடிக்க தற்போது கூண்டு வைத்துள்ள னர். சிறுத்தை கேமராவில் பதிவான இடத்தில் இருந்து சுமார் இருநூறு மீட்டர்  தூரத்தில் சிறுத்தை கடந்து வந்து  பாதையை கண்டறிந்த வனத்துறையி னர், மலையடிவார பகுதியில் மறை வாக கூண்டை வைத்து, தீவிரமாக கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.