districts

இருளர் இனத்தைச் சேர்ந்தவர் மீது வனத்துறையினர் தாக்குதல்!

தருமபுரி, ஜூலை 21- பென்னாகரம் அருகே இருளர் இனத்தைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்திய வனக்காவலர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள் ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் அருகே உள்ளது  வேப்பமரத்துகோம்பு. காவிரி ஆற்றங் கரையோரம் அமைந்துள்ள இந்த கிரா மத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த அந்தோணி (60) - மாதம்மாள் (55) தம்பதி யினர், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த  ஜூலை 13 ஆம் தேதியன்று பென்னாக ரம் வனசரகத்தைச் சேர்ந்த வனக்காப் பாளர் பிரித்திவிராஜ், காவலர் ஐய்யண் ணன் ஆகியோர் அந்தோணி குடியிருப் புக்கு சென்று மாதம்மாளிடம், “நீங்கள் குடியிருக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது. நீங்கள் வெளியேற வேண்டும்” என தெரிவித்துள்ளனர். அப்போது, வெளியே சென்றிருந்த அந்தோணி வீட்டிற்கு வந்து, “நாங்கள்  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளோம். ஆடு, மாடு மேய்ப் பது தான் எங்கள் தொழில். எங்களை  விட்டுவிடுங்கள்” எனக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வனக்காப் பாளர் பிரித்திவிராஜ், வனக்காவலர் ஐய்யண்ணன் ஆகியோர், அந்தோ ணியை சாதிப்பெயரைச் சொல்லி இழி வாக திட்டி, கல்லால் அந்தோணியை அடித்துள்ளனர். இதனால் படுகாயம டைந்த அந்தோனி பென்னாகரம் அரசு  மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு  திரும்பினார். இதைத்தொடர்ந்து ஜூலை 16 ஆம்  தேதியன்று ஒகேனக்கல் காவல் நிலை யத்தில், தன்னை தாக்கி சாதிப்பெயரை இழிவாக பேசிய வனத்துறையைச் சேர்ந்த பிரித்திவிராஜ், ஐய்யண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய  வேண்டும், என வலியுறுத்தி அந்தோணி  புகாரளித்தார். ஆனால், ஒரு வாரத் திற்கு மேலாகியும் காவல் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. எனவே, வனத்துறை யைச் சேர்ந்த பிரித்திவிராஜ், ஐய்யண் ணன் மீது வழக்குப்பதிவு செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கம் மாவட்ட நிர்வாகத்தையும், தமி ழக அரசையும் வலியுறுத்தியுள்ளது.