districts

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஏலம் விடும் மீனவர் நலத்துறை!

ஈரோடு, ஜூலை 21- நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வா தாரத்தை ஏலம் விடும் மீனவர் நலத்துறைக்கு எதிராக கண்ட னங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன வர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் பொருட்டு பொதுப்பணித் துறை, மீன்வளத்துறை, வருவாய்த் துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள  ஏரி, குளம், அணைகளில் மீன் பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தான் வழங்க வேண்டும், தனியார் ஏலம் விடக்கூடாது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மீனவர் சங்கங்கள் போராடி வரு கின்றன. சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்து, தமிழ்நாட் டில் அரசு துறைகளின் கட்டுப்பாட் டில் உள்ள ஏரி, குளம், அணைகளில் மீன்பிடிக்கும் குத்தகைக்கான உரிமை உள்நாட்டு மீனவர் கூட்டு றவு சங்கங்களுக்குத்தான் முன்னு ரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பும் பெறப்பட் டது. தீர்ப்பின் அடிப்படையில் மீன்வ ளத்துறை உடனடியாக அரசாணை வெளியிட காலதாமதமானதால், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் “காத்திருக்கும் போராட்டம்” அறி விக்கப்பட்டது. இப்பின்னணியில் மீன்வளத் துறை சார்பில் கடந்த 9ஆம் தேதி மீனவர் கூட்டுறவு சங்கங்களிடம் மீன்பாசி குத்தகையைப்பெற அர சாணை வெளியிடப்பட்டது. மேலும் ,அதில் பவானிசாகர் உள்ளிட்ட சில அணைகளுக்கு இந்தத்தீர்ப்பு பொருந்தாது என்று அரசாணை யில் மறுக்கப்பட்டுள்ளது. இது சரியானதல்ல. பவானிசாகர் அணை உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் மீன்பிடிக்கும் உரிமையை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்கள் மற்றும் பாசன நீர்த்தேக்கங்களில் மீன்பிடி உரிமையானது நிபந்தனை களுக்குட்பட்டு முன்னுரிமை அடிப் படையில் மீனவர் கூட்டுறவு சங்கங் களுக்கு வழங்கிட வேண்டும். அதே சமயம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு வழங்கப்படாமல் நீர்வளத்துறை வசமுள்ள குளங் கள் மற்றும் பாசன நீர்த்தேக்கங்க ளில் மீன்பிடி குத்தகையானது திறந்தநிலை டெண்டர் மற்றும் ஏலத்தில் அடிப்படையில் வழங்கி டவும், ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை வசமுள்ள குளங்கள் மற்றும் பாசன நீர்த்தேக்கங்களில் பொது ஏல முறையில் மீன்பிடி குத்தகை வழங்கிடவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என மீன வர் கூட்டுறவு சங்கத்தினர் கூட்டம் நடத்தி ஒப்புதல் அளித்தது போல கையொப்பம் பெற ஈரோடு மாவட் டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முயன்றுள்ளது. இதன் உள்நோக்கத்தை அறிந்த அந்தியூர் பாசனப் பகுதியில் உள்ள எண்ணமங்கலம், கெட்டிச முத்திரம், பிரம்மதேசம், வேம்பத்தி மற்றும் கரும்பாறைப்பள்ளம் ஏரி மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் கையெழுத்திட மறுத்துள்ளனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி, நீதி மன்ற தீர்ப்பு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடி குத்தகை வழங்க வேண்டும் என்று கூறியுள் ளது. ஆனால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயல்பாடு நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக, பொது ஏலம் விடும் வகையில் உள் ளது. இது நீதிமன்றத் தீர்ப்பை அவம திக்கும் செயலாகும் எனத் தெரிவித் தார். மாவட்ட ஆட்சியரின் கீழ் உள்ள துறையின் செயல்பாடு தனி யாருக்கு ஆதரவாக உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விட முயல்கிறது என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.