districts

img

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து விவசாயிகள் சங்கம் போராடும்: பி.சண்முகம்

தருமபுரி, ஏப்.29- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  பறிக்கின்ற எந்த திட்டமாக இருந்தா லும் அதனை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராடும் என அச்சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர்  பி.சண்முகம் தெரிவித்துள் ளார். தருமபுரி மாவட்டத்தில் ஐடிபிஎல், விடிபிஎல், உயர் மின் கோபுரம் அமைத் தல், எட்டு வழிச்சாலை, கெயில் நிறு வனத்தின் எரிவாயு குழாய் பதிப்பது போன்ற விவசாய நிலத்தையும், விவ சாயிகளின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில் பென்னாகரம் வட்டம், கரி யப்பன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் (42) என்பவரின் விளை நிலத்தில் கெயில் நிர்வாகத்தி னர் எரிவாயு குழாய் பதிப்பதற்காக அளவீடு பணி மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட் டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி கணேசன் திடீரென தன்னுடைய நிலத் திலேயே தூக்கு மாட்டிகொண்டு தற் கொலை செய்து கொண்டார்.

இச்சம்ப வம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த துயரமான சம்பவத்திற்கு கெயில் நிறுவனமே முழு பொறுப்பேற்க வேண்டும்.கணே சனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை வழி யாக மேற்கொள்ள வேண்டும் என வலி யுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்  தலைமை வகித்து பேசி னார். மாநில துணைத்தலைவர்  டி.ரவீந்திரன், மாநிலச் செயலாளர் பி.டில்லிபாபு, மாவட்டசெயலாளர் சோ.அருச்சுணன், மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட பொரு ளாளர் எஸ்.கே.கோவிந்தன், மாவட்ட நிர்வாகிகள் இ.பி.பெருமாள்,கே.அன்பு, எஸ்.தீர்த்தகிரி, ஆர்.சின்ன சாமி, சி.வஞ்சி, ஆர்.சக்திவேல், மீன் முருகன் மற்றும் வேலுமணி, கிருஷ் ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.குமார்,மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாரிமுத்து, பேரூராட்சி கவுன்சிலர் வே.விசுவநாதன், ஆர்.மல்லிகா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அ.ஜீவானந்தம் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

பி.சண்முகம் 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் பேசியதாவது, கெயில் குழாய் பதிப்பை எதிர்த்து கடந்த காலங்களில்  விவசாயி கள் தொடர்ந்து போராடியதன் விளை வாக அதிமுக அரசு விவசாயிகளை பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் நிறை வேற்றாது என கொள்கை முடிவாக எடுத்து கெயில் திட்டத்தை கைவிட் டது. அதேபோல், தற்போதைய தமி ழக அரசும் இத்திட்டம் குறித்து எவ்வித முடிவையும் அறிவிக்காத நிலையில், எரிவாயு குழாயை விவசாய நிலத்தில் பதிக்கும் கெயில் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதா கும். மேலும், கெயில் நிர்வாகத்தின் இச்செயலுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமானது காவல் துறையையும், வட்டாட்சியரையும் அனுப்பியுள்ளது. ஆகவே, இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கெயில் குழாய் விவசாய நிலங்க ளில் பதிக்கப்பட்டால் 7 மாவட்ட விவ சாயிகள் பாதிக்கப்படுவார்கள். மா, தென்னை, பனை ஆகிய மரப்பயிர்கள் பாதிக்கப்படும்.விவசாயம் செய்ய முடியாது.  நிலத்தின் மதிப்பு அதாள பாதாளத்திற்கு சென்றுவிடும். இத னால் விவசாயிகளின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படும். ஆகவே, விவ சாய நிலம் வழியாக கெயில் குழாய் பதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். 

இதேபோல், திமுக தேர்தல்  வாக்கு றுதியாக எட்டுவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது என தெரி வித்தது. இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் 10 ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலம் பாதிக்கப்படும். 100 நீர்நிலை கள் அழிந்துபோகும், பல்லாயிரக் கணக்கான வீடுகள் காணாமல் போகும். எனவே, எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து தமிழக முதல்வர், அரசின் கொள்கை நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும். பல்வேறு சாலைகள் இருக்கும்போது எட்டு வழிச்சாலை திட்டம் தேவையற்றது. இதனை தமிழக அரசு கைவிட வேண் டும். அதேநேரம், விவசாயிகளின் வாழ் வாதாரத்தை பறிக்கின்ற எந்த திட்ட மாக இருந்தாலும் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் எதிர்த்து போராடும் இவ்வாறு பி.சண்முகம் தெரிவித்தார்.

போலீசார் அராஜகம்

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநில பொதுச்செயலாளர் பி.சண்மு கம் மற்றும் தலைவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சியை சந்தித்து கோரிக்கை மனுவினை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவல கம் நோக்கி சென்றனர். ஆனால், இவர் களை தடுத்து நிறுத்தி போலீசார் உள்ளே விட மறுத்தனர். இதனால் மேலும் ஆவேசமடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதன்பின்னர் வேறு வழியின்றி ஆட்சி யரை சந்தித்து மனு அளிக்க போலீ சார்  அனுமதித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை மனுவினை அளித்தனர். அப்போது, உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்திற்கு கெயில் நிர்வாகத்திட மிருந்து உரிய இழப்பீடு  பெற்று தருவ தற்கும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கு வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர்  உறுதியளித்தார்.  அதேநேரம், கெயில் எரிவாயு குழாய் விவசாயிகள் நிலங்களில் பதிக் கும் முடிவை கைவிட வேண்டும் என் றும், விவசாய கணேசன் இறப்பு குறித்து நீதிபதியின் தலைமையில் பொது விசாரணை நடத்த வேண்டும் எனவும் சங்க தலைவர்கள் என கேட் டுக் கொண்டனர்.

குடும்பத்தாருக்கு ஆறுதல் 

முன்னதாக,  தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் பி.சண்முகம் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மாநில செய லாளர் பி.டில்லிபாபு,மாவட்ட செயலா ளர் சோ.அருச்சுணன், மாவட்ட தலை வர் கே.என்.மல்லையன், பகுதி செய லாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், பகுதி செயலாளர் ஆர்.சின்னசாமி ஆகி யோர்  தற்கொலை செய்து கொண்ட கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று கணேசனின் உருவப்படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை  செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.