districts

img

வீட்டின் கதவை உடைத்த யானை

வீட்டின் கதவை உடைத்த யானை கோவை, ஜூலை 31- தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நுழைந்த காட்டு யானை சுற் றுச்சுவரை இடித்துவிட்டு அங் கிருந்து வெளியேறிய செல் போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, தொண்டாமுத்தூர், மருத மலை உள்ளிட்ட இடங்களில் யானைகள் நடமாட்டம் அதிக  அளவில் உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் வரும் காட்டு யானைக ளால் சேதங்கள் நிகழ்வது வாடிக்கையாக இருந்து வருகி றது. அண்மையில் தொண்டாமுத்தூர் அருகே கோயில் பூசாரி ஒருவரை காட்டு யானை தாக்கிய நிலையில், யானையை விரட்ட முயன்ற இளைஞரை அடித்துக் கொன்றது. இந்நிலை யில், தொண்டாமுத்தூர் அடுத்த மத்திபாளையம் பகுதியில் செவ்வாயன்று இரவு ஒற்றைக்காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையின ருக்கு தகவல அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த  வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அன்னை இந்திரா நகர் என்ற பகுதியில் ரசீல் மற்றும் பிரியா என்ற தம்பதியினரின் வீட்டின் கதவை  உடைத்து உள்ளே நுழைந்த காட்டு யானை, சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முயன்றது. இதில், சுவர் முழுவதுமாக இடிந்து  விழுந்து சேதமடைந்தது. இதனை அக்கம் பக்கத்தினர் தங்க ளது செல்போன்களில் வீடியோ பதிவு செய்த நிலையில், தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைர லாகி வருகிறது.