நாமக்கல், பிப்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் எதிரொ லியாக, ஆழ்துளைக்கிணறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையம், பெரியமணலி ஊராட்சி, புதுவளவில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டு, அடிப்பம்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகாமையில் உள்ள தனிநபர், ஜேசிபி இயந்திரம் மூலம் ஆழ்துளைக்கிணறு, அடிப்பம்பை உடைத்து சேதம் ஏற்படுத்தி விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர், நூதனமான முறையில் மெத்தனப் போக்கில் செயல்படும் அதிகாரிகளை பாராட்டி, மலர் கொத்து கொடுத்து மாலை அணிவிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திங் களன்று ஆழ்துளைக்கிணறு சரி செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் மகிழ்ச்சிய டைந்த அப்பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.