கோவை, ஏப்.19- கோவை மக்கள் சிந்தனை மேடையின் சார்பில் 8 ஆவது அமர்வு மற்றும் டாக்டர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி பங்கேற்று உரையாற்றினார். மக்கள் சிந்தனை மேடையின் சார்பில், டாக்டர் அம் பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்தநாள் விழா கருத்த ரங்கம் வடகோவை காமராஜபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி மாமன்ற உறுப் பினர் பி.எஸ்.சரவணகுமார் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.முருகேசன் வரவேற்புரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினரும், மாதர் சங்க தலைவர்களில் ஒருவரான கே.பால பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அரசியல் சாசனத்தின் மாண்புகளை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் பாலபாரதி பேசுகையில், இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டத்தை வகுத்துக் கொடுத்த அம் பேத்கர், ஒரு லட்சத்து நான்காயிரம் புத்தகங்களை படித்தவர். அவர் பெற்ற பட்டங்கள் அயல் நாட்டுக் கல்வி ஆகியவை யோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் இன்று வரை அவருக்கு இணையாக படித்தவர்கள் எவரும் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலங்களில் நீர் பாசன திட்ட அமைச்சராக இருந் தவர். மக்களின் தேவைகள் பூர்த்தியடைய உற்பத்தி பெருக வேண்டும், விலை குறைய வேண்டும் என்கிற பொரு ளாதார தத்துவத்தின் அடிப்படையில் திட்டங்களை அரசுக்கு வகுத்துக் கொடுத்தவர்.
இந்திய அரசியல் சாசன சட்டத்தில் உலகளாவிய மிகச் சிறந்த அரசியல் சாசன சட்டத்தை இந்தியாவிற்கு கொடுத் தவர். அப்படிப்பட்ட அம்பேத்கரை, மோடி அரசு விழுங்க நினைக்கிறது, அவர் சூரியனைப் போல் சுட்டெரித்து விடுவார். விழுங்க நினைக்கும் மீன் அல்ல, பாஜகவின் தொண்டை யில் சிக்கிய முள்ளாய் இருப்பார். மதச்சார்பின்மையை பாது காக்க அரசியல் சாசனம் உயிரோடு இருப்பதை உறுதி செய் கிற ஜனநாயக நெறிமுறைகள் உள்ள சட்டத்தை வகுத்துக் கொடுத்தவர் அம்பேத்கர். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று பேசுகிற பாஜக, எந்தச் சூழலிலும் ஒரே சாதி என் பதை ஏற்க மாட்டார்கள். அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பாஜக நடத்தும் நாடகம்தான் இதுவெல்லாம். திட்டவட்டமான மக்கள் விரோத கட்சி பாஜக. இவர்களை 2024ஆம் ஆண்டு விரட்டி அடிப்பது தான் ஜனநாயக சக்தி களின் மிகப்பெரிய கடமை என்றார். இதனைத்தொடர்ந்து, “இந்தியாவை உலுக்கிய வைக்கம்” என்கிற தலைப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞானம் உரையாற் றினர். இதில், திமுகவின் மா.மகுடபதி, மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு நகர செயலாளர் என்.செல்வராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சுதா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். முடிவில், எம்.எம். ராஜன் நன்றி கூறி னார்.