districts

img

போராடி பெற்ற உரிமையை பறிக்கும் திமுக அரசு

சேலம், ஏப்.22- உழைக்கும் வர்க்கம் போராடி பெற்ற 8  மணி நேர வேலை சட்டத்தை, 12 மணி நேர மாக மாற்றிய திமுக அரசை கண்டித்து சிஐ டியு, வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலக வரலாற்றில் தொழிலாளர்களை பாதுகாக்க 8 மணி நேர வேலை, 8 மணி நேரம்  உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்ற உரி மையை உழைக்கும் வர்க்கம் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு பெற்றது. அந்த உரிமையை பறிக்கும் செயலில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. 8 மணி நேர வேலையை, 12 மணி நேரமாக உயர்த்த தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இதனை கண்டித்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட் டக்குழு சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வி.ஜெக நாதன் தலைமை ஏற்றார்.

இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், மேற்கு மாநகர தலைவர் கோபி, வடக்கு மாநகர செயலாளர் குரு பிரசன்னா, மாவட்ட துணைச்செயலா ளர் திவ்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தொழி லாளர்களின் 8 மணி நேர வேலையை எப்போ தும் உயர்த்தக்கூடாது. சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இக்கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் மிகப் பெரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர். நாமக்கல் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ள 12 மணி  நேர வேலையை, மீண்டும் 8 மணி நேரமாக மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ராயப்பன் தலைமை வகித் தார். இதில் மாவட்ட தலைவர் எம்.அசோகன், மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, துணைத் தலைவர் செங்கோடன், உதவிச்செயலாளர் கள் கு.சிவராஜ், சு.சுரேஷ், ஆட்டோ தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர்.