districts

img

வீட்டுமனைப்பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

உடுமலை, செப்.24 - தமிழக அரசால் வழங்கப்படும் இல வச வீட்டு மனை பட்டாவிற்கு பலமுறை  விண்ணபித்தும், பட்டா வழங்கவில்லை  எனக்கூறி திங்களன்று பொதுமக்கள்  உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிமங்கலம் ஒன்றியம், தொட்டம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணை கிணறு மற்றும் ஒன்றியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச வீட்டுமனைப்பட்டா  வழங்கக்கோரி பலமுறை விண்ணப்பித் துள்ளனர். இருப்பினும் பட்டா வழங்கப் படவில்லை. இந்நிலையில், 100க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் திங்களன்று  உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம்  நடத்திய பொதுமக்களிடம் வட்டாட்சி யர் சுத்தரம் கோரிக்கைகளை விரை வில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அத்து டன் போராட்டத்தில் கலந்து கொண்ட  அனைத்து மக்களிடமும் வீட்டு மனைக் கான மனுக்களை பெற்றுக்கொண்டார். இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.