கோவை, ஆக.18- துப்பறியும் நிறுவனம் என்ற பெய ரில், பெண்ணை உளவு பார்த்து மன உளைச்சலை ஏற்படுத்திய 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்த வர் 32 வயது பெண். இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. கருத்து வேறுபாடு கார ணமாக கணவரை பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வருகி றார். சாய்பாபா காலனியில் உள்ள தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்க ளாக அந்த பெண் வேலைக்கு செல் லும் போதும், வீட்டுக்கு திரும்பும் போதும், வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது செல்போனில் போட்டோ எடுத்து அவர் வேலை பார்க்கும் அலு வலகம் அருகே காலை முதல் மாலை வரை காத்திருந்தார். அந்தப் பெண் ணின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த பெண், அந்த வாலி பரை அக்கம் பக்கத்தினர் உதவியு டன் பிடித்து விசாரித்துள்ளனர். அதற்கு அந்த வாலிபர் நான் கோவை யில் உள்ள துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நிறுவ னத்தினர் கொடுத்த பணியை செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் சாய் பாபா காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீ சார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த வாலிபர் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எஸ்.எஸ்.குளம் பச்சாபாளையத் தைச் சேர்ந்த சரண்குமார் (20) என்ப தும், அந்த பெண்ணின் கணவர் துப்பறி யும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தனது மனைவியை கண்காணிக்கும் படி கேட்டுக் கொண்டதால், கோவை அத்திப்பாளையத்தை சேர்ந்த துப்ப றியும் நிறுவன உரிமையாளர் சிவபிர காசம் (72) உத்தரவின்பேரில், சரண் குமார் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பெண் கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சரண்குமார் மற்றும் சிவப்பிரகாசத்தை கைது செய்தனர். இதன்பின்னர் அவர் களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், அப் பெண்ணின் கணவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.