கோவை, ஆக.25- கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிற, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப் பதை கைவிட வேண்டும் என சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் கோவை கோட்ட 9 ஆவது பேரவை கூட்டம், கோட்டப்பொறியாளர் அலு வலக வளாகத்தில் சனியன்று நடை பெற்றது. கோட்டத் தலைவர் பி.முரு கேசன் தலைமையில் நடைபெற்ற பேரவையில், துணைத்தலைவர்கள் எ.விஸ்வநாதன், இரா.தமிழரசன் முன்னிலை வகித்தனர். கோட்ட இணைச்செயலாளர் ஆர்.ரங்கநா தன் வரவேற்றார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.ஹரிபால கிருஷ்ணன் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். சங்கத் தின் செயலாளர் பி.முருகன், பொரு ளாளர் பி.சிவக்குமார் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ச.ஜெக நாதன், துணைத்தலைவர் எஸ்.எம். வேலுமணி, மாநில செயற்குழு உறுப் பினர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இக்கூட்டத்தில், மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைப்பதால் 3,500 சாலைப்பணியாளர்கள். சாலை ஆய்வாளர் பணியிடங்கள் ஒழிக்கப்ப டும். கிராமப்புற இளைஞர்களுக் கான வேலை வாய்ப்பு பறிபோகும். தனியார் முதலாளிகள் சுங்கவரி வசூல் கொள்ளை நடத்த வழிவகுக் கும். எனவே, ஆணையம் அமைக் கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். சாலைப் பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளார்களின் முதுநிலைப் பட்டி யல் முறைகேட்டுடன் வெளியிட்டு முறைகேடாக பதவி உயர்வு வழங்க காரணமான முதன்மை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு சட்டம் SEC:41 (1) OF TNGS (CS) ACT 2016-ன் படி முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, செப்.17 ஆம் தேதி யன்று திண்டுக்கல்லில் நடைபெ றும் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு மாநில மாநாட்டில் அனைத்து சாலைப் பணியாளர்களும் குடும்பத் துடன் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் பேரவையை நிறைவு செய்து உரை யாற்றினார். கோட்ட இணைச்செய லாளர் ஆர்.மருதாசலம் நன்றி கூறி னார்.