கோவை, ஏப். 15: அண்ணாமலையை தோற்கடிப்பதுதான் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒற்றுமையான முடிவு என்று தேசிய பஞ்சாலைக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்த னர். என்டிசி பஞ்சாலைகள் கடந்த 50 ஆண்டு காலம் வரலாறு படைத்து பெருமளவில் நூல் துணி உற்பத்திகளை செய்து வந்தது. ஆனால், இன்றைய ஒன்றிய அரசு நான்கு ஆண்டுகளாக என்டிசி ஆலைகளை இயக்காமல் முடக்கி வைத்துள்ளது. இதனால், நாடு முழுவதும் ஒன்பது மாநி லங்களில் 15 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் சம்பந்தமாகவும், மக்கள் விரோத செயல்பாடு கள் குறித்து அனைத்து தொழிற்சங்ககள் சார்பில் மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள என்டிசி ஆலை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தின ஊடகவியலாளர் சந்திப்பு திங்களன்று நடைபெற்றது. இது குறித்து தேசிய பஞ்சாலைக் கழக மாநிலச் செயலா ளர் டி.எஸ்.ராஜாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் 123 தொழிற்சாலைகள் 1974 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் தேசியமயமாக்கப் பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் தனியார் ஆலைகளுக்கு இணையாக செயல்பட்டு வந்த ஆலையின் லாபத்தில் தொழிலாளர்களுக்கு 35 சதவீத போனசும் வழங்கப்பட்டது. பின்னர், மேலாண்மை குறைபாடு காரணமாக பல ஆலை கள் மூடப்பட்டு 23 ஆலைகள் மட்டும் இயக்கி வந்தன. இந்த ஆலைகளையும் கொரோனா காலத்தில் ஒன்றிய பாஜக அரசு என்டிசி ஆலைகளை மூடியது. கெரோனா பாதிப்பு குறைந்து அனைத்து ஆலைகளையும் செயல்டுவதற்கு அனுமதி வழங்கியபோது, மத்திய பஞ்சாலைக் கழக ஆலைகளை மட்டும் திறக்கவில்லை. என்டிசி ஆலைகள் சட்ட விரோத மாக முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குபின் நிலுவையிலுள்ள பாதி சம்ப ளத்தை தொழிலாளர்களுக்கு என்டிசி நிர்வாகம் கொடுத் துள்ளது. ஆனால், மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை செயல்படுத்தவில்லை. கோவை நகரின் மையப்பகுதியில் மூடப்பட்ட காளீஸ்வரா, சோமசுந்தரா ஆலைகளுக்கு சொந்த மான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் உள்ளன. இதனை, தனியாருக்கு குத்தகைக்குவிடுவது, விற்றுவிடுவது என அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அண்ணா மலை பேசியுள்ளார். இந்த நிலங்களை என்டிசியின் வளர்ச் சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்டிசி ஆலைகளை மூடியதால் தமிழகத்தில் மட்டும் தினசரி 7 ஆயிரம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது. ரூ.1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழு வதும் 23 ஆலைகளை மூடியதால் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொழிலை வளர்ச்சி யடையச் செய்வேன், கோவையை மாற்றிக்காட்டுவேன் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள தொழிற்சங்கங்கள் தயா ராக இல்லை. தேர்தல் நேரத்தில் தொழிலாளர்களை, பொது மக்களை, வாக்காளர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக் கிறார்கள். எனவே, அண்ணாமலையை தோற்கடிப்பதுதான் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒற்றுமையான முடிவு என் றார். முன்னதாக மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத் தினர் கோஷங்களை எழுப்பினர். இதில், ஹெச்எம்எஸ் அமைப்பு செயலாளர் மனோகரன், ஏஐடியூசி மூத்த தலை வர் எம்.ஆறுமுகம், சிஐடியூ பொதுச் செயலாளர் சி.பத்மநா பன், எம்.எல்.எஃப் மூத்த தலைவர் மு.தியாகராஜன், ஐஎன் டியூசி துணைத் தலைவர் வெங்கடசாமி, என்டிஎல்எஃப் தலை வர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.