districts

img

உயிரிழந்த தந்தையின் மருத்துவக் கனவை நனவாக்கிய கூலி தொழிலாளியின் மகள்

தருமபுரி மாவட்டம், கம்பை நல்லூரை அடுத்த ஜெ.பாளையம் பகு தியை சேர்ந்தவர் காளியப்பன், பவுத்த மணி தம்பதியினர். இத்தம்பதியனருக்கு பிரியதர்சினி, பிரேமதர்சினி, காவியதர் சினி என 3 பெண்களும், வசந்த பிரி யன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலை யில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  காளியப்பன் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து தனது குழந்தை களை காப்பாற்றவும், படிக்க வைக்கவும்  பவுத்தமணி கூலிவேலை செய்து வாழ்க் கையை நடத்தி வருகிறார். இந்நிலை யில், பிரேமதர்சினி 10 வகுப்பு படிக்கும் போது, 500க்கு 425 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவி யாக வந்துள்ளார். இதேபோல் 12 ஆம் வகுப்பில் 600க்கு 536 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து மருத்துவ கனவோடு இருந்த பிரேமதர்சினிக்கு தடையாக இருந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவிகித இடஒதுக்கீடுட்டில் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இடம் கிடைத்துள்ளது. தந்தையின் கனவு இதுகுறித்து மருத்துவப்படிப்பிற்கு தேர்வாகியுள்ள பிரேமதர்சினி கூறுகை யில், மருத்துவ கனவு என்பது தனது தந் தையின் கனவு; அதை தற்போது நனவாக்கி உள்ளேன் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், எனது சிறு வயது முதலே எனது தந்தை மிகவும் சிரமபட்டு கூலி வேலைக்கு சென்று தான் எங்களை வளர்த்து வந்தார். நான் 10 ஆம் வகுப்பில் முதல் மாணவியாக வரு வாள் என எனது தந்தை எல்லோரிடமும் கூறிகொண்டே இருந்தார். ஆனால், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வரும் 15  தினங்களுக்கு முன்பே விபத்தில் உயிரி ழந்து விட்டார். எனது தந்தையின் வாய்ச் சொல் படியே பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்தேன். அதை காண எனது தந்தை அப்போது இல்லை. இருந் தாலும் 12 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண் களுக்கு 536 மதிப்பெண்கள் பெற்றேன்.  மருத்துவத்திற்கு நீட் தேர்வு எழுத போதிய பயிற்சி பெற வேண்டும் என்ற நிலையில், பணம் கட்ட வசதி இல்லை.  தமிழக அரசிற்கு நன்றி அதனால், நான் பயின்ற பள்ளி நூல கத்தில் உள்ள புத்தகங்களை படித்து பயிற்சி பெற்று வந்தேன். எனக்கு உறு துணையாக பள்ளி ஆசிரியர்கள் பெரும் உதவியாக இருந்தனர். மருத்துவ கலந் தாய்விற்கு செல்லும் போது எனது தலைமை ஆசிரியர் பொருளாதார உதவி யும் செய்தார். நான் குறைந்த மதிப்பெண் கள் எடுத்தாலும் தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டால் தான் எனக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது.  அதனால் தமிழக அரசுக்கு எனது நன் றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் எனது தந்தை கண்ட கனவு தற்போது  நனவாகி நான் மருத்துவராக தேர்வாகி யுள்ளேன் என கண்ணீர் மல்க தெரி வித்தார். -ஜி.லெனின், தருமபுரி