அவிநாசி, அக்.3- அவிநாசி அருகே வடுகபாளையம் மக் கள் பிரச்சனையை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து திங்க ளன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், வடுகபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பழுத டைந்த மகளிர் சுகாதார வளாகத்திற்கு பரா மரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப் பினும் பணிகள் நடைபெறவில்லை. இதே போன்று புதிய மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். வடுகபாளையம் பகுதிக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீரை முறை யாக விநியோகம் செய்ய வேண்டும். ராய கவுண்டம்புதூரில் விழுந்து விடும் நிலை யில் உள்ள மேல்நிலைத் தொட்டியை அகற்றி புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண் டும். நஞ்சை தாமரைக் குளம், பகுதியில் உள்ள மயானத்தை சுத்தம் செய்து, தெரு விளக்கு, சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். ஊராட்சிகளில் சாலை வசதி, சாக்கடை மற்றும் கழிப்பிடங்களுக்கு, பணி கள் நடைபெற வேலை ஒப்பந்தம் போடப் பட்டும் ஆறு மாதங்கள் கடந்தும் வேலை கள் நடைபெறவில்லை.
மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் கவனத் திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர் போராட்டத்தை யடுத்து 2021 வருடம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி 43 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவ தாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தும் நட வடிக்கை இல்லை. இந்நிலையில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடுகபாளையம் ஊராட்சி கிளைகள் சார்பில் காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனையறிந்து பொதுமக்க ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இதனையடுத்து ஊராட்சியின் தலைவர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் திருலோ கசந்திரன், ஊராட்சி செயலாளர் கவிதா, ஒன்றிய தலைவர் ஜெகதீசன், ஊராட்சி ஒன் றிய அலுவலக அதிகாரி இளையராஜா உள் ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழைய கோரிக்கைகள் 10 நாட்களுக்குள் நிறை வேற்றி தரப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் விரைந்து முடித்து தருவதாக உறுதியளித்த னர். இதனையடுத்து காத்திருப்புப் போராட் டத்தை தாற்காலிகமாக ஒத்திவைத்து அனை வரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் வடுகபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் கே.ராமசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் ச. நந்தகோபால் போராட் டத்தை துவக்கி வைத்தார். இதில், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், ஒன் றிய செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, வடுகபா ளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர். அய்யம்மாள், ஆர்.தீபா மற்றும் கிளை செய லாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.