உதகை, நவ.21- அரசு பேருந்தில் போகும் போது சாதாரண கட்டணமும் வரும் போது விரைவு கட்டணம்மும் வசூலிப்பது குறித்து பயணி வழக்கு தொடர்ந்த தையடுத்து கூடுதல் கட்டணம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் உரிய விசாரணை நடத்தி சரியான தொகையை கணக்கிட்டு செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள கோடேரி கிராமத் தைச் சேர்ந்த சு.மனோகரன் என்ப வர், கடந்த 5.8.2019 அன்று மஞ்சூரில் இருந்து கீழ் குந்தா கிராமத்துக்கு அரசு பேருந்தில் பயணித்த போது ரூ.7 கட்டணமாக வசூலிக்கப்பட் டது. கீழ்குந்தாவிலிருந்து மஞ்சூர் திரும்பும் போது ரூ.11 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. போகும் போது சாதாரண கட்டணமும் வரும் போது விரைவு கட்டணம்மும் வசூலிப்பது குறித்து குழப்பமடைந்த பயணி, இதை எதிர்த்து நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நடுவர் மன் றத்தில் வழக்கு தொடுத்தார். இவ் வழக்கு விசாரிக்கப்பட்டு, கடந்த 11.11.2022 அன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. இதில், பாதிக்கப்பட்டவரிடம் கூடுதலாக பெற்ற கட்டணத்தை திருப்பிக் கொடுக்கவும், மன உளைச் சல் ஏற்படுத்தியதற்காக இழப்பீ டாக ரூ. 20 ஆயிரம் வழங்கவும் போக்குவரத்து கழகத்துக்கு உத்தர விடப்பட்டது. மேலும், மேற்படி பேருந்தில் 19.1.2018 முதல் தற் போது வரை அனைத்து பயணி களிடமும் வசூலிக்கப்பட்ட கூடு தல் கட்டணத்தை நுகர்வோர் சட்ட உதவி மையத்துக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. மேற்படி, கூடுதல் கட்டணம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் உரிய விசாரணை நடத்தி சரியான தொகையை கணக்கிட்டு செலுத்த உத்தரவிடப்பட்டது. தவ றும் பட்சத்தில் வட்டார போக்கு வரத்து அலுவலர் நுகர்வோர் உதவி மையத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப் பீடு வழங்க வேண்டும் என்றும், மேலும் வட்டார போக்குவரத்து அலு வலர் பேருந்துகளில் அரசு நிர்ண யித்த கட்டணம் தான் வசூலிக்கப் படுகிறதா ? என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வகையான பேருந்துகளிலும் கட்டணப்பட்டி யல் பயணிகளுக்கு தெரியும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும், போக் குவரத்து கழகம் பாதிக்கப்பட்டவ ருக்கு வழக்கு செலவும் தொகை யாக ரூ.3000 வழங்க வேண்டும். உரிய காலத்தில் இழப்பீடுகளை வழங்கத் தவறும் பட்சத்தில் இது நாள் வரையிலான காலத்திற்கு 12 சதவீத வட்டியுடன் வழங்க உத்தர விடப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத் தில் தமிழ்நாடு போக்குவரத்து கழ கத்தால் மேல்முறையீடு செய்யப் பட்டது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, மாவட்ட நுகர்வோர் மன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.