ஈரோடு, பிப். 17- சாதிமறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்புக் கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத் திரத்தைச் சேர்ந்த எம்.சூர்யா முதுகலை பட்டதாரியாவார். இவர் பிற்படுத்தப் பட்ட சாதியைச் சேர்ந்த தனப்பிரியாவை காதலித்து வந்தார். இருவரும் மன மொத்து பண்ணாரியம்மன் கோவி லில் திருணம் செய்து கொண்டனர். இத னைத் தொடர்ந்து திங்களன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் பாதுகாப்புக் கேட்டு மனு கொடுத்தனர். அவர் வழிகாட்டுதலின் படி அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் பெண்ணின் தாயாரை அழைத்து எழுதி வாங்கி அனுப்பினர். சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த தம்பதிகளை நேரில் சந்தித்து, சிபிஎம் ஈரோடு மாவட்டச்செயலாளர் ஆர்.ரகுராமன், மாநிலக்குழு உறுப்பி னர் வீ.அமிர்தலிங்கம், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டத் தலைவர் பிபி.பழனிசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வி.மாரிமுத்து, ஆர்.சுந்தர்ராஐன் மற்றும் கோபி தாலுகாச் செயலாளர் க. பெருமாள், ததீஒமுன்னணி தாலுகாச் செயலாளர் சி.ரங்கசாமி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரி வித்தனர்.