districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

‘மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் வெற்றி! வசிஷ்ட நதியின் குறுக்கே பாலம் கட்ட அரசாணை

சேலம், டிச.19- மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத் தின் விளையாக, ஆத்தூர் அருகே வசிஷ்ட நதியின் குறுக்கே பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, துலுக்கனூர் கல்லாநத்தம் பகுதியில் சுமார்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பவர் களின் உடலை வசிஷ்ட நதியின் அக்கரையில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக் கம் செய்யும் நிலை இருந்து வந்தது. அப்படி சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது நதி யில் தேங்கியுள்ள ஆள் உயர கழிவுநீரில் இறங்கி உடலை எடுத்து செல்லும் அவல நிலை இருந்து வந்தது. எனவே, நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் துலுக்கனூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் உட்பட மாவட்ட, தாலுகா நிர் வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்றக் கோரி  கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசனிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு  அளித்தனர். மேலும், இம்மனு தமிழக முதல் வருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் வியாழனன்று துலுக்கனூர் பகுதியில் வசிஷ்ட நதியின் குறுக்கே பாலம் கட்டிக் கொடுக்கப்படும், என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வருக்கும், கோரிக்கையை வென்றெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அப்பகுதி பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சாதிப் பெயரைக்கூறி இழிவாக பேசும் விடுதி காப்பாளர் மீது ஆட்சியரிடம் புகார்

சேலம், டிச.19- சாதிப் பெயரைக்கூறி இழிவாகப் பேசும் விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சேலம் ஆட்சியர் அலுவலகத் தில் புகாரளித்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் சேலம்  மாவட்ட நிர்வாகி கோகுல்ராஜ் தலைமை யில், ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆண்கள் நல விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழ னன்று புகார் ஒன்றை அளித்தனர். இது குறித்து கோகுல்ராஜ் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்பேத்கர் ஆதி திராவிடர் பழங்குடியினர் ஆண்கள் நல விடுதி யில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து விடுதி காப்பா ளரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய நிலையில், புதனன்று விடுதியி லுள்ள மாணவர்களுடன் பேசிக் கொண்டி ருந்தபோது விடுதி காப்பாளர் அனைவரை யும் அழைத்து சாதிப் பெயரைக்கூறி இழி வாக பேசி மிரட்டியுள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார்.

நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சேலம், டிச.19- சேலம் மாநகராட்சி, அஸ் தம்பட்டி மண்டல அலுவலக சாரதா கல்லூரி அருகில் பிர தான குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை சரி செய்ய வேண்டியிருப்பதா லும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் டிச.21, 22  ஆகிய இரண்டு நாட்களுக்கு  குடிநீர் விநியோகம் இருக் காது. எனவே, பொதுமக் கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என மாநகராட்சி ஆணையர் அறி வுறுத்தியுள்ளார்.

பழங்கரை ஊராட்சி இணைப்பு  துணை முதல்வரிடம் கோரிக்கை

அவிநாசி,டிச.19- அவிநாசி நகராட்சி தரம் உயரும் போது பழங்கரை ஊராட்சியை இணைக்க வேண்டும் என துணை முதல்வ  உதயநிதி ஸ்டாலினிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை  மனு அளித்துள்ளனர்.  அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கரை ஊராட்சி யில் 2500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நான்கு  கோடிக்கு மேல் வருமானம் வரக்கூடிய ஊராட்சியாக பழங் கரை ஊராட்சி இருந்து வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகம்  முதல், பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் மிக அருகில் உள்ளது.  இந்த நிலையில் அவிநாசி பேரூராட்சி இணை நகராட்சி யாக தரம் உயர்த்த, ஆட்சியர் மூலமாகவும், உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இதில் அப் பகுதியைச் சேர்ந்த சிபிஎம், சிபிஐ, திமுக, அதிமுக,  காங்கிரஸ், மதிமுக, பாமக, ஆதி தமிழர் பேரவை உள் ளிட்ட கட்சியினர் அவிநாசி பேரூராட்சி நகராட்சியாக தரம்  உயர்த்தும் போது பழங்கரை ஊராட்சியினை அதனுடன்  இணைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ள னர்.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

நாமக்கல், டிச.19- பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த  இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த  14 வயது சிறுமி, 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். விசைத்தறி  தொழிலாளர்களான இவரது பெற்றோர், இரவு நேரத்தில் பணிக்கு சென்று விடுவர். இந்நிலையில், அதே பகுதியைச்  சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர், சிறுமியிடம் பழகி வந்தது டன், உயர்கல்வி படிக்க வைத்து வேலை வாங்கித்  தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, 2018 ஜூலை 21 முதல் சிறுமியை இரவு நேரத்தில்  தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை  செய்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம்  தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது தாயார் பள்ளி பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மணிகண்டனை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக் கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த  வழக்கு விசாரணை புதனன்று நிறைவடைந்த நிலையில், மணி கண்டனுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள், 7  ஆண்டுகள், ஓராண்டு என்ற அளவில் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை, டிச.19- பொள்ளாச்சி ஆழியார் அணையின் நீர்மட்டம் 119.20  அடியை எட்டி உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழி யாறு அணை 120 அடி கொண்டது. கடந்த வாரத்தில் மேற்கு  தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை யால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து  காணப்பட்டது. இந்நிலையில், 120 அடி உயரம் கொண்ட அணை தற்போது 119.20 அடியை எட்டி உள்ளதால், அணை யின் பாதுகாப்பு கருதி எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், ஆழியார் அணை கரையோரம் உள்ள  மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப் பணித்துறையினர் கூறி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத் துள்ளனர்.

இலவச வீட்டுமனை பட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு பட்டியலின மக்கள் புகார்

தருமபுரி, டிச.19- இலவச வீட்டுமனைப் பட்டியலில் முறைகேடு நடை பெற்றுள்ளதாக பட்டியலின மக்கள் புகார் தெரிவித்துள்ள னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வருவாய் வட்டத்துக் குட்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட ஆய்வுக் கூட் டம் மற்றும் முகாம், புதனன்று தாசம்பட்டி சாலையில் உள்ள  தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பென்னாக ரம் அருகே உள்ள மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சி, நரசிபுரம்  காலனி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பட்டியலின பொதுமக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு தேர்வானவர்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள் ளன. மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பட்டிய லின மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், வேறு ஊராட்சி யைச் சேர்ந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள தாகக்கூறி, ஆய்வுக் கூட்டத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையறிந்த பென்னாகரம் துணை வட்டாட்சியர் மாலா, பென்னாகரம் காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டி யன் ஆகியோர் பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி, கூட்டம்  முடிந்தவுடன் ஆட்சியரிடம் குறைகளை தெரிவிக்க அனு மதிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், நரசிபுரம் காலனி பகுதி யில் இலவச வீட்டுமனைப்பட்டா கோரி விண்ணப்பித்த வர்களில் தகுதியுடைய பயனாளிகளைக் கண்டறிந்து பட்டி யல் தயாரிக்க வேண்டும். மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சி யைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதில் முன்னுரிமை அளிக்க நடவ டிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதில் உடன்பாடு ஏற்பட்டு  பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கருப்பண்ணசாமி நகர் மக்களுக்கு பட்டா:   தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

திருப்பூர், டிச.19 - திருப்பூர் மாவட்டம் பல்லடம்  வட்டம் மாணிக்காபுரம் ஊராட்சி  கருப்பண்ணசாமி நகர் மக்களுக்கு,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் பங்கேற்ற நிகழ்ச்சியில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கமும் தொடர்ந்து மேற்கொண்ட  முயற்சியும், பல்வேறு கட்ட போராட்டங்களும், தற்போது இந்த  மக்களுக்கு பட்டா பெற்றுத்தர உதவி இருக்கிறது. பல்லடம் மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ண சாமி நகர் பகுதியில் வசித்து வரும்  மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாணிக்கா புரம் கிளைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வந்தது. கையெழுத்து இயக்கம், மனு கொடுப்பது, கிராம  சபையில் தீர்மானம், கிராம சபை  ஒத்திவைப்பு, கண்டன ஆர்ப்பாட் டம் என தொடர்ந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 30 அன்று தோழர்  சீனிவாசராவ் நினைவு தினத்தன்று  பட்டா கொடுக்கும் வரை பல்ல டம் தாலுகா அலுவலகத்தில் காத்தி ருப்பு போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் தலைமையில் நடந்த போராட்டத்தின் போது, அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அன்றைய தினமே பட்டா நகல் வழங்கப்பட்டது. விரைவில் அரசு நிகழ்ச்சியில் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்று உத்தர வாதம் அளிக்கப்பட்டது. இதை யடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது, தமிழ்நாடு துணை முதல்வர் திருப்பூர் வருகையை ஒட்டி வியாழனன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற  அரசு நிகழ்ச்சியில் கருப்பண்ண சாமி நகர் 27 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் உறுதுணையாக இருந்து  வழிகாட்டிய, தொடர் போராட்டத் திற்கு கிடைத்த வெற்றி இது என்று  அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.