நாள் முழுவதும் அன்னதானம் முதலமைச்சர் துவக்கி வைத்தார்
கோவை, டிச.26- மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல மைச்சர் கானொலி காட்சி மூலம் வியாழனன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சுமார் 750 க்கும் மேற் பட்ட கோவில்களில் மதியம் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், அதிகம் பேர் கோவிலுக்கு வரும் கோவில்களில் நாள் முழுவ தும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறி விக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 9 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவு படுத்தப்பட்ட நிலையில், வியாழனன்று மதுரை கள்ள ழகர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தில் சென்னையில் இருந்தவாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதில், கோவை மாவட்டம், மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநக ராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவில் அறங் காவலர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன்னதானம் திட்டத்தை செயல்படுத்தினர்.
புகாரை காவலர்கள் ஏற்க மறுப்பதாக குற்றச்சாட்டு
சேலம், டிச.26- இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகாரளித்தும், புகாரை ஏற்க மறுக்கும் காவலர்க ளால் பாதிக்கப்பட்டவர் மனஉளைச்ச லுக்குள்ளாகி உள்ளார். சேலம் மாநகரம், குப்தா நகர் பகுதி யைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் கடந்த டிச.23 ஆம் தேதியன்று மல்டி பிளக்ஸ் தியேட்டர் அருகே உள்ள ஒரு கடை முன்பு, தனது இருசக்கர வாக னத்தை வெளியே நிறுத்திவிட்டு சென் றுள்ளார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தை காண வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடை முன்பிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை எடுத்துக்கொண்டு, பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகா ரளிக்க சென்றுள்ளார். அங்கு இருந்த காவலர்கள் காவல் நிலையத்தில் புகாரை பெற ஆள் இல்லை எனவும், அடுத்த நாள் வருமாறு தெரிவித்துள்ள னர். அடுத்த நாள் சென்றபோது, அன் றும் காவல் துறையினர் புகாரை வாங்க வில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ்குமார் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார். திருட்டுப் போன இரண்டு சக்கர வாக னத்தை ஒருவர் திருடி செல்லும் கண் காணிப்பு கேமரா காட்சிகளை கொடுத் தும் காவல்துறையினர் இதுவரை புகாரை கூட பெறாமல் இருப்பது காவல் துறையினரின் மெத்தன போக்கை காட்டுவதாக பலரும் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 18% வளர்ச்சியடைந்துள்ளது
கோவை, டிச. 26- கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் போக்குவரத்து 18% வளர்ச்சியடைந்துள்ளது என இந்திய விமான நிலைய ஆணையம் நவம்பர் மாதத் தின் தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப் பிடுகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 18 சதவிகிதம், சரக்கு போக்கு வரத்து 12 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. அபுதாபிக்கு இண்டிகோ சர்வதேச விமானங்கள் மற்றும் சிங்கப்பூ ருக்கு தினசரி விமானங்கள் தொடங்கப்பட்ட பிறகு, சர்வ தேச பயணிகள் இயக்கத்தில் 42 சதவிகிதம் மற்றும் சிஜே பியில் சர்வதேச சரக்கு கையாளுதலில் 107% அதிக ரித்துள்ளது. உள்நாட்டுத் துறையில், பெங்களூரு மற் றும் கோவாவுக்கு இண்டிகோ தினசரி கூடுதல் விமானங் களை இயக்குவதால், கோயம்புத்தூரில் பயணிகள் போக்குவரத்து 16சதவிகிதம் மற்றும் சரக்கு போக்குவ ரத்து 3சதவிகிதம் அதிகரித்துள்ளது. விமான இயக்கத்தைப்பொருத்தவரையில், சர்வதே சம் – 190 சேவைகளும், உள்நாட்டு – 1686 என மொத்தம் – 1876 சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி - 381. 25 சதவிகிதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகளை பொருத்தமட்டில், சர்வதேச விமானப் பயணம் - 23,681 பேரும், உள்நாட்டு பயணம் - 2,42,277 என மொத்தம் - 2,65,958 பேர் பயணம் செய்துள்ளனர். சரக்குகளை பொருத்தவரையில், கடந்த ஆண்டு நவம்பரை காட்டி லும், இந்த ஆண்டு 102.12சதவிகிதம் வளர்ச்சியடைந் துள்ளதாக கூறப்படுகிறது.
வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் விபத்துக்குள்ளானது
கோவை, டிச.26- வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் தலைக்குப்பறக் கவிழ்ந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வர் சைமுதின்(66). இவர் தனது குடும்பத்துடன் வால் பாறையை சுற்றி பார்க்க சுற்றுலா வந்துள்ளனர். இந் நிலையில், வால்பாறை பகுதியில் இருந்து கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு செல்வதற்காக தனது காரில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் சென்றுள்ளனர். அப் போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக காரை சாலை ஓரம் ஒதுக்கி உள்ளார் சாலையோரம் இருந்த கல் மீது காரின் சக்கரம் ஏற்றப்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்பறக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரினுள் இருந்த சைமுதின் மற்றும் அவரது மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் காய மடைந்தனர். விபத்தை கண்ட மக்கள் போராடி அனைவ ரையும் மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல் நிலைய போலீசார் இந்த விபத்து குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நொரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்
தருமபுரி, டிச.26- பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்திய லாரியை, கனிம வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக நொரம்பு மண் கடத்துவதாக தரு மபுரி கனிமவளத்துறைக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், புதனன்று இரவு கனிம வள உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், பாலக்கோடு அடுத்த சர்க்கரை ஆலை கூட் ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது அவ்வழியாக நொரம்பு மண் ஏற்றிக் கொண்டு வந்த லாரியை பிடித்து ஓட்டுநரிடம் விசாரித்ததில் அவர், பாலக்கோடு புது பட்டாணியர் தெரு வைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பழனி (47) என்ப தும், சர்க்கரை ஆலை பின்புறம் உள்ள ஏரி யிடிலிருந்து அனுமதியின்றி நொரம்பு கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து, பாலக்கோடு காவல் நிலையத்தில் பன்னீர்செல்வம் ஒப் படைத்தார். இதுகுறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருநாகத்தின் வீடியோ வைரல்
கோவை, டிச.26- டாப்ஸ்லிப் பகுதிக்கு சுற்றுலா சென்ற பயணி ஒருவர், அபூர்வ இனமான கிங் கோபுரா என அழைக்கும் கருநாகத்தை பார்த்து அதனை வீடியோ எடுத்து உள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனச்சரகம் கொண்ட பகுதியாகவும் இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் ஆகும். இப் பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு, மான் இனங்கள் மற்றும் அபூர்வ இருவாச்சி பறவை, பிற பறவை இனங் களும் உள்ளன. இதையடுத்து வனப்பகுதி யில் அதிக நடமாட்டம் உள்ள மலைப்பாம்பு, சாரை நாகம், மரம் விட்டு மரம் தாவும் பச்சை பாம்பு இனங்கள் வசித்து வருகின்றன. தற் போது சீதோசன நிலை பனிமூட்டமாக உள்ள தால் வனப்பகுதியை விட்டு நகர்ந்து பொது மக்கள் கண்களில் தென்படுகிறது. பாம்பு இனங்களின் ராஜா என கூறும் அபூர்வ இன மான கிங் கோபுரா என அழைக்கும் கருநா கம் தற்போது டாப்ஸ்லிப் பகுதிகளில் அதிக மாக தென்படுகிறது. இந்நிலையில், வியாழ னன்று டாப்ஸ்லிப் பகுதிக்கு சுற்றுலா சென்ற பயணி கருநாகத்தை பார்த்து வீடியோ எடுத்து உள்ளார். அது தற்போது சமூக வலைதளங்க ளில் வைரலாகி வருகிறது.