தருமபுரி, நவ.8- தருமபுரி மாவட்டத்தில் ரூ.644.54 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று காணொலி மூலம் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.64.08 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள், மொரப் பூர் வட்டாரம், முத்தனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் ரூ.78.24 மதிப்பீட் டில் 2 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய் வக கட்டடங்கள், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.502.22 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப் பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ.644.54 லட்சம் மதிப்பீட்டில் 11 வகுப் பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டி டங்கள் கட்டப்பட்டன. இதனை தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளியன்று திறந்து வைத்தார். அதகப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டி டங்கள் திறப்பு விழாவில் மாவட்ட ஆட் சியர் கி.சாந்தி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணவர்க ளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிர மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் ஐ.ஜோதி சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.