தருமபுரி, மார்ச் 25- தமிழக முதல்வர் செய்த சாத னைகள் அனைத்தும், ஒவ்வொரு வீட்டின் சுவற்றிலும் பிரதிபலிக் கும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள் ளார். தருமபுரி மக்களவை தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி அறிமுக கூட்டம் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டம் தரும புரியில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் தலைமை வகித்து பேசுகையில், தேர்தல் என்றால் சில கட்சிகள் வருவார்கள்; தங்களது வேலை முடிந்தவுடன் போய்வி டுவார்கள். ஆனால், திமுக என் றென்றும் மக்கள் பணி செய்வதிலே முதன்மையானது. கடந்த தேர்த லில் பாமக அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு முதல்வர் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழக அரசின் சாத னைகளை ஒவ்வொரு சுவற்றிலும் பிரதிபலிக்கும் வகையில், நமது கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர மாக பணியாற்ற வேண்டும். வரும் மார்ச் 29 ஆம் தேதி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பா ளர்களை ஆதரித்து தடங்கம் பகுதி யில் உள்ள பிஎம்பி கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேச உள்ளார், என்றார். இக்கூட்டத்தில் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி., திமுக மாவட்டச் செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன், முன் னாள் எம்.பி.,,க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், நகரச் செயலா ளர் நாட்டான் மாது, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், வர்த்தக அணி நிர் வாகி சத்தியமூர்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தீர்த்தராமன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. குமார், விசிக மாவட்டச் செயலா ளர் பாண்டியன், மதிமுக மாவட் டச் செயலாளர் ராமதாஸ், சிபிஐ மாவட்டச் செயலாளர் கலைச்செல் வன், மக்கள் நீதி மையம் மாவட் டச் செயலாளர் வெங்கடேசன், திரா விடர் கழக மாநில அமைப்பு செய லாளர் ஊமை.ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், ஒன்றியச் செயலாளர் சேட்டு நன்றி கூறினார்.