தொழில் மாநகரமான திருப்பூரில் பொங் கல் பண்டிகை என்றால் இப்போதெல் லாம் ஒரு வாரம் ஊரே அடங்கி விடுகிறது. பர பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திருப்பூர் வெறிச்சோடிக் கிடக்கும். மிகப் பெரும்பான்மை யான உழைக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள். இங்கிருக்கும் உள்ளூர் மக்கள் பொங்கல் கொண்டாடுவது பெரும்பா லும் வெளியே தெரியாது. ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை பரந்த கிராமப்புறமாக இருந்த திருப்பூர், உழவுத் திரு நாளான பொங்கல் பண்டிகையை எப்படிக் கொண்டாடி இருக்கும் என்ற கேள்வியுடன் இந்த மண்ணின் மனிதர்களிடம் கேட்டபோது அதன் சிறப்பை அறிந்து கொள்ள முடிந்தது. நொய்யல் நதி குறுக்கு வெட்டாகப் பாய்ந்து செல்லும் திருப்பூர் வெகு சிறப்பாக, உறவு களுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்து வந்திருக்கிறது. பொங்கல் பண்டிகை என்பது ஓரிரு நாட்களில் முடிந்து போகக்கூடிய விழா அல்ல. ஒரு மாத காலத்திற்கு மேலாக தொடரும் ஒரு கோலாகலம். பொங்கல் பண்டிகை என்றால் வீடுகளைத் தூய்மைப்படுத்தி வெள்ளை அடிப்பது எல்லா வீடுகளிலும் நடக்கும். காப்புக் கட்டுவது ஒரு தொடக்கம். பூளைப்பூ கொண்டு வீடுகளின் நுழைவாயிலில் அந்த காப்பைக் கட்டுவார்கள். இது பண்டிகை தொடக்கத்திற்கான அறிவிப்பு. ஒரு மாத காலம் வீடுகளின் முன்பாக சாணத் தில் பிள்ளையார் பிடித்து அதில் பூவை வைத்து, நாள் முழுவதும் வைத்திருப்பார்கள். அது காய்ந்தவுடன் பத்திரப்படுத்தி வீட்டில் சேகரித்து வைப்பார்கள். இப்படியாக 30 நாட்களும் கடந்து செல்லும். சேகரித்த, காய்ந்து போன அந்த சாணப் பிள்ளையார்களை நிறைவாக நீர் நிலைகளில், நதிக் கரையில் கரைத்து விடுவார்கள். தை மாதத்தின் முதல் நாள் புது பித்த ளைப் பானையில், பச்சரிசி இட்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கி, “பொங்கலோ! பொங்கல்!” என்று குடும்பத்தினர் கூடியிருந்து குலவை இட்டு இயற்கைப் பெருங்கடவுள் சூரியனை வழிபட்டு மகிழ்வார்கள். மஞ்சள் கன்று, கரும்பு ஆகிய வையும் சர்க்கரை பொங்கலுடன் படைக்கப் பட்டிருக்கும். குடும்பத்தினர், உறவினர்கள் ஒன்றாகக் கூடிப் பொங்கல் உண்டு உறவை வளர்த்து மகிழ்வார்கள். மறுநாள் மாட்டுப் பொங்கல். உலகின் வெவ் வேறு பகுதிகளிலும் அந்தந்த சமூகத்தின் அறு வடை திருநாள், உழுபடை கருவிகளுடனும், உத வும் கால்நடைகளுடனும் கொண்டாடப்படுவது வரலாற்றுத் தளத்தில் பதிவாகி இருக்கிறது. தமிழர்களின் அறுவடை திருநாளான பொங் கல் பண்டிகையில், தங்கள் உழவுக்கு உற்ற தோழனாகத் திகழும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வாக இந்த மாட்டுப் பொங் கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளைக் குளிப் பாட்டி, தூய்மைப்படுத்தி, அவைகளின் கொம்பு களுக்கு அழகிய வண்ணம் பூசி, உடலெங்கும் அலங்காரம் செய்து, வழிபாடு செய்து மாடு களுக்குப் பொங்கல் படைத்து இந்த நாள் கொண்டாடப்பட்டு உள்ளது.
இந்த வட்டாரத்தில் மாட்டுப்பொங்கலை, “பட்டிப் பொங்கல்” என்று அழைக்கும் வழக் கம் இருந்தது. விவசாயிகளின் வளர்ப்பு கால் நடைகளை பட்டிகளில் அடைத்துப் பாதுகாப் பார்கள். எனவே பட்டிப் பொங்கல் என்று வந்திருக் கலாம். பல கிராமப்புறங்களில் இந்த விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனேகமாக இப்போது மறைந்து விட்ட ஒரு நிகழ்வு, பூப்பறிக்கும் கொண்டாட்டம் ஆகும். பூப்பறிக்கும் கொண்டாட்டம் என்பது நொய்யல் ஆற்றுக் கரையில் அல்லது நீர்நிலைக் கரை களில், கரும்பு, தேங்காய் மிட்டாய், முறுக்கு உள் ளிட்ட வீட்டில் சமைத்தப் பலகாரங்களைக் கொண்டு வந்து அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து கலந்துரையாடி, விளையாடி, பலகாரங்களை உட்கொண்டு மகிழ்ச்சியான நினைவுகளுடன் பூப்பறிக்கும் கொண்டாட்டம் நிறைவடையும். இப் பொழுது தூய்மையான நீர் நிலைகளும், நதிக் கரைகளும் குப்பைமேடுகளாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அத்தோடு சேர்ந்து அந்த பூப் பறிக்கும் கொண்டாட்டமும் மறைந்து விட்டது என்பது ஒரு சோக வரலாறு. காணும் பொங்கல் என்பது உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் ஒரு கொண்டாட்டமாக இருக்கும். அலைபேசி காலம் தொடங்கும் வரை, பொங்கல் வாழ்த்து அட்டை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்புவது ஒரு பெரு மகிழ்வான நிகழ்வாகும். வாழ்த்து அட்டை அனுப்புவது வாட்ஸ் அப் அனுப்புவது போன்ற தல்ல! அது நீங்கள் எனக்கு நெருக்கமானவர், முக்கியமானவர் என்று உணர்வுகளை வெளிப் படுத்த கூடியதாக இருக்கும். வாழ்த்து அட்டை களை வாழ்நாளெல்லாம் சேகரித்துப் பாதுகாத்து வைத்த தலைமுறை அனேகமாக மறைந்து விட்டது என்றே சொல்லலாம்.
பெண்களின் திருவிழா
ஒட்டுமொத்த பெரு நிகழ்வாக நடைபெறும் பொங்கல் திருவிழாவில் அடிப்படை ஆதார விஷயமாக இருப்பது பெண் பிள்ளைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் என்று மூத் தோர்கள் சொன்னார்கள். மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வீடுகளில் சேகரித்து வைப்பதில் தொடங்கி, பூப்பறிக்கும் நிகழ்வு வரை ஒவ்வொரு தருணத்திலும் பெண் குழந்தைகள், சிறுமிகள், இளம்பெண்கள் உள்பட பெண் களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். புத் தாடைகளும் பெண் குழந்தைகளுக்குத்தான். “புள்ளைங்கப் பொங்கல்!” என்ற சொல் வழக்கு இருந்திருக்கிறது. உழவுத் திருநாளான பொங் கல் பெண்களுக்கான திருநாளும் ஆகும். அத்துடன் ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்ற பெயர்களில் நடத்தப்படும் வீர விளையாட்டு இளைஞர்களுக்கு இந்தப் பொங் கல் பண்டிகையின் உடன் நிகழ்வாக பல கிரா மங்களில் நடந்திருக்கிறது. இப்போதும் பல கிராமங்களில் சடுகுடு எனப்படும் கபடி விளை யாட்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மைக் காலம் வரை தொடர்ந்த இந்த கொண்டாட்டம் தற்போது மறக்கப்படும் பண்பாடாக, வரலா றாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்போது பொங் கல் என்றால் வீட்டில் குக்கரில் பொங்கல் சமைத்து, தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து கொள்வதுடன் கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. சக மனிதர்களுடன் உணர்வுபூர்வமான உறவு கொண்டு கூட்டு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் மெய்யான மகிழ்ச்சியை வழங்கிய பொங்கல் பண்டிகையின், அந்தக் கால நினைவுகள் இனி எப்போது வாய்க்கும்?
பண்டைய தமிழர்கள் இயற்கையுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை முறையை மேற்கொண்டனர். அவர்கள் இயற்கையை இறைவனாக எண்ணி, வணங்கியும் வாழ்த் தியும் வந்தனர். தாங்கள் வாழ்ந்த நிலப் பகுதியை இயற்கை அமைப்பின் அடிப் படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாகப் பிரித்தனர். மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம், காடும் காடு சார்ந்த பகுதி யும் முல்லை நிலம், வயலும் வயல் சார்ந்த பகுதி மருத நிலம், கடலும் கடல் சார்ந்த பகுதி யும் நெய்தல் நிலம், மணலும் மணல் சார்ந்த பகுதியும் பாலை நிலம் என வகைப் படுத்தப்பட்டிருந்தது. அவரவர் வாழ்ந்த நிலத்தில் நடை பெற்ற முதன்மையான தொழிலின் அடிப் படையில் விழாக்களை நமது முன்னோர் கள் கொண்டாடி வந்துள்ளனர். மருத நிலப் பகுதியில் வாழ்ந்த தமிழர், உழவுத் தொழிலை முதன்மையான தொழிலாகச் செய்து வந்தனர். அவர்கள் தங்களின் அறு வடைக் காலத்தில் அறுவடைத் திருநாளை வெகுசிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். உயிர்களின் அத்தியாவசியத் தேவை உணவு என்ற அடிப்படையில் அறுவடைத் திருநாள் தமிழர் பண்பாட்டின் முதன்மை யான அடையாளமாகி, அனைவருக்கு மான திருவிழாவாகியது. வெறும் கொண் டாட்டமாக இல்லாமல் அறுவடைக்கு உதவியாக இருந்த கால்நடைகள், கதி ரவனுக்கு நன்றி சொல்லும் விழாவாகவும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சிறப்பு மிகுந்த பொங்கல் விழா தமி ழகத்தில் நான்கு நாள் விழாவாகக் கொண் டாடப்படுகிறது. மார்கழித் திங்களின் இறுதி நாளில் போகிப் பண்டிகை கொண்டா டப்படுகிறது. ‘பழையன கழிதலும்; புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே’ என்பது சான்றோர் மொழி. அதற்கேற்ப, போகித் திருநாளன்று வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருள்களை நீக்கி, வீட்டைத் தூய்மை செய்வார்கள். பச்சரிசி மாவில் வாசலில் கோலமிட்டு வீட்டை அழகுபடுத்துவார்கள்.
மறுநாளான தைத்திங்கள் முதல் நாள், கதிரவனுக்கு நன்றி கூறும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கூடி, கதிரவன் உதிக்கும் திசையை நோக்கி, அறுவடை செய்த நெல்லிலிருந்து எடுத்த புத்தரிசியு டன் பாசிப் பருப்பு, வெல்லம், ஏலம், முந்திரி, பால், உலர் திராட்சை, நெய் ஆகியவற்றைக் கலந்து, புதுப்பானையில் பொங்கலிடு வார்கள். பொங்கல் பொங்கி வரும் நேரத்தில், குலவையிட்டுப் ‘பொங் கலோ பொங்கல்’ என மகிழ்ச்சி யொலி எழுப்புவார்கள். இரண்டாம் நாளில் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவர்களின் உயரிய செல்வமான மாடுகள், இதர கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, உடலில் வண்ணப் பொடி களைத் தூவி, புதிய சலங்கை, துண்டு ஆகியவற்றை கழுத்தில் கட்டி அலங்க ரிப்பார்கள். பின்னர் தோட்டத்தின் ஒரு பகுதியில் மண்ணை வெட்டி அடுப்பு செய்து அதில் பொங்கலிட்டு, மாடுகளுக்கு தலைவாழை இழையிட்டு பொங்கல், கரும்பு, பழங்கள் வைத்து வழிபடுவார்கள். பின்னர் கால் நடைகளுக்கு அவற்றை ஊட்டிவிட்டு, தாங்களும் உண்டு மகிழ்வார்கள். இப் பொங்கல் கிராமப்புற பகுதிகளில் பட்டிப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. காளை மாடுகளின் திமிலைத் தழுவி இளைஞர்கள் தங்களின் வீரத்தைக் காட் டும் நிகழ்ச்சி ஏறு தழுவுதல் எனவும் ஜல் லிக்கட்டு எனவும் கூறப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்றோ, அடுத்த நாளிலோ இந்த வீர விளையாட்டு நடத்தப்படும். நான் காவது நாள் நிகழ்ச்சி காணும் பொங்கல் எனப்படும். கன்னிப் பொங்கல், காணும் பண் டிகை எனப்படும் இந்தநாளானது குடுப் பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் வீடு களுக்குச் சென்றும், சுற்றுலாத் தலங்க ளுக்குச் சென்றும் தங்களது அன்பைப் பரி மாறிக் கொள்ளுதல், பெரியவர்களிடம் ஆசி பெறுதல் போன்றவற்றின் மூலம் குடும்ப உறவையும், ஒற்றுமையையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் நாளாக கொண்டாடப்படுகிறது.
அறுவடைத் திருநாளை தென்னிந்திய மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் வடநாட்டில் உத்ராயண், மகர் சகராத், லோஹ்ரி, மகா சாஜா, பெüஸ் சங்க ராந்தி, மாகி, தில் சங்கராந்தி உள்ளிட்ட பெயர்களிலும், தாய்லாந்தில் சொங்க்ரான், லாவோஸில் பிம லாவோ, மியான்மரில் திங்க்யான், நேபாளத்தில் மாகே சங்க ராந்தியாகவும் இலங்கையில் புத்தாண்டாக வும் கொண்டாடுகின்றனர். தொடக்க காலத்தில் உயிர் வாழ்வதற் காக உணவு உற்பத்தி என்று இருந்தது, பிற் காலத்தில் வருவாய் ஈட்டுவதற்காக என்றா னது. தற்போது வேளாண் தொழில் உழ வர்களுக்கு போதிய அளவுக்கு லாபம் கொடுக்கக் கூடியாத இல்லை. பருவகால மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகள் விவ சாயிகளுக்கு பெரும் நட்டத்தைக் கொடுக் கின்றன. இதனால் வேளாண் பரப்பும், வேளாண் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிகையும் குறைந்து கொண்டே வரு கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரண மாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயருவது வேகமாகிக் கொண்டே வருகிறது. கூட்டுக் குடும்பங்களும் சிதறி, அபார்ட்மென்ட் கலாசாரம் அதிகரித்து விட்டது. இயற்கைக்கு நன்றி கூறும் உணர்வுப்பூர்வமான விழாவான பொங்கல் தற்போது, சம்பிரதாயத்துக்காக கொண்டா டும் நிகழ்வாக மாறி வருகிறது. என்றாலும் நகரங்களிலும், கிரா மங்களிலும் ஆண்டுதோறும் கொண்டாடப் படும் பொங்கல் விழா, நமது பாரம்பரியத் தையும், தொன்மையான கலாசாரத்தையும் குழந்தைகளின் ஊடாக அடுத்தத் தலை முறைக்குக் கடத்துகிறது என்பதில் உவகை கொள்வோம். பொங்கலோ பொங்கல்!. (ந.நி)