கோவை, மார்ச் 20- வேட்பு மனுத்தாக்கல் செய்ய சவப்பெட்டியுடன் வந்த சுயேட்சை வேட்பாளரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சவப்பெட்டியை பறிமுதல் செய்து, வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். மார்ச் 20 முதல் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக் களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி யாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர் தல் நடத்தும் அலுவலரும். மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடியிடம் மனுத் தாக்கல் செய்ய. கோவை குனியமுத் தூர் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அவர், நாட்டில் ’ஜனநாயகம் இறந்துவிட்டது’ ஜனநாய கத்தை மீட்க வேண்டும் என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டி யுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், சவப்பெட்டியுடன் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என தெரி வித்து சவப்பொட்டியை பறிமுதல் செய்து அவரை மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதித்தனர். நாமக்கல் நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் காந் தியவாதி ரமேஷ். இவர் காந்தி போல் வேடம் அணிந்து தொடர்ந்து சமூக நல பணிகள் உள்ளிட்டவற்றை மேற் கொண்டு வருகிறார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக் கான வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 20) முதல் தொடங்கி யுள்ளது. இதையொட்டி காந்தி போல் வேடம் அணிந்து வந்த ரமேஷ் டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி தோளில் சுமந்தபடி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட தேர்தல் அலுவ லர் ச.உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.