districts

img

யானைகளின் உயிரிழப்பை தடுக்க நுண்ணறிவு கேமரா வனத்துறை அமைச்சர் துவக்கிவைத்தார்

கோவை, பிப்.9- ரயில் மோதி யானைகள் உயி ரிழக்கும் சம்பவங்களை தடுக்க, இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு கேமரா  மூலம் யானைகளை கண்காணிக் கும் திட்டத்தை வனத்துறை அமைச் சர் துவக்கி வைத்தார். கோவை மாவட்டம், மதுக்கரை  முதல் கேரள மாநிலம் வாளையார்  வரை சுமார் 21 கிலோமீட்டர் தூரம்,  அடர்ந்த வனப்பகுதிகளின் வழி யாக இரண்டு ரயில்பாதைகள் உள் ளன. கோவையில் இருந்து கேரளா வுக்கு செல்லக்கூடிய வழித்தடம் “ஏ” லைன் என்றும், கேரளாவில் இருந்து கோவைக்கு வரக்கூடிய வழித்தடம் “பி” லைன்  என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்பா தைகளில் தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வரும் நிலை யில், இரவு நேரங்களில் ரயில் மோதி  யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க,  யானை நடமாட்டம் இருக்கும் பகுதி களில் சுரங்கப்பாதை அமைக்கபட் டது.  இதனுடைய மற்றுமொரு முயற்சியாக யானைகள் நடமாட் டத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் விதமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தெர்மல் கேம ராக்களை  பொறுத்த வனத்துறை  முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ரயில்பாதைகளின் அரு கில் 12 இடங்களில் உயர் கோபு ரங்களில் செயற்கை நுண்ணறிவு  மற்றும் தெர்மல் கேமராக்களை பொருத்தும் பணியை மேற் கொண்டு வந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலை யில், வெள்ளியன்று  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத் தையும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறத்து வைத்தார்.  பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், வாளை யார், ஆனைகட்டி, சோளக்கரை இருட்டுப்பள்ளம் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் எப்போ தும் இருக்கும். கேரளாவிற்கு இடம் பெயரும் யானைகள் வழித்தவறி ஊருக்குள் வருவதால், மனித – யானை மோதல் ஏற்படுகிறது. அதை தவிர்க்க வனத்துறை தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை வனக்கோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 928 முறை  வனத்தை விட்டு யானைகள்  வெளி யேறியுள்ளது. சோளக்கரை பகுதி யில் இரண்டு ரயில் பாதைகளின்  நடுவில் உள்ள பகுதிக்கு யானை கள் தண்ணீர் குடிக்க வருகிறது. அவ்வாறு வரும்போது விபத்து ஏற்பட்டதில் 11 யானைகள் ரயில் மோதி  உயிரிழந்துள்ளது. சுரங்க பாதை ஏற்படுத்தினாலும் அது நிரந்தரதீர்வு இல்லை.  இந்நிலையில், யானை நடமாட் டத்தை 24 மணி நேரமும் கண்கா ணிக்க வனத்துறையும், அரசும் முடிவு செய்து, 7 கீ.மீ தொலைவு யானைகள் கடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 7 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 12  உயரமான கோபுரங்கள் 500  மீட்டர் தொலைவில் வைக்கப்பட் டுள்ளது. இதனால், விலங்குகள் நடமாட்டத்தை கண்டறிந்து முன் கூட்டியே நடவடிக்கை மேற் கொண்டு உயிரிழப்பை தடுக்க லாம்.  கடந்த ஆட்சியின் 10 ஆண்டு களில் எந்த திட்டமும் அறிமுகம் செய்யவுமில்லை. ஆனால் திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதை செய்துள்ளோம் என்றார். மேலும், யானைகளை காப்பாற்ற இந்தியாவில் மட்டுமின்றி, உலகி லேயே முதல்முறையாக தொடங் கப்பட்டு திட்டம் இது என்றார்.