அவிநாசி, டிச.15 அவிநாசி நகருக்குள் வராமல், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் வெள்ளியன்று மாலை சிறைப்பிடித்தனர். திருப்பூரிலிருந்து அவிநாசி வழியாக கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்து அவிநாசி புதிய பேருந்து நிலை யம் செல்லாமல், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்றுள்ளது. இதனை அறிந்த, சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு, தனியார் உணவு விடுதி முன்பு தனியார் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பிரச்சனை சம்பந்தமாக ஆர்டிஓ விடம் சமூக அலுவலர் கள் தொலைப்பேசி மூலமாக பேசினர். மேலும் பேருந்து நடத் துநர், ஓட்டுநர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக அவிநாசி பகு திக்குள் வந்து செல்வதாக உறுதி அளித்த பின்பு போராட்டம் கைவிட்பட்டது.