சேலம், ஜூன் 13- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த சேலம் ஈர டுக்கு பேருந்து நிலையம், இரண்டு தினங்களிலேயே மூடப் பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். சேலம் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், பழைய பேருந்து நிலையம் ரூ.96.53 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைக்கப் பட்டு, இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. இதனை கடந்த ஞாயிறன்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பேருந்துகளையும் இயக்கி வைத்தார். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாநகர பேருந்து நிலையம் என்ற பெயரும் சூட்டப்பட்டது. இந்நிலையில், முதல்வர் திறந்து வைத்து இரண்டு தினங்களிலேயே இந்த ஈரடுக்கு பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் முழுவதும் மூடப்பட்டு ஒரு பேருந்துகள் கூட இல்லாத நிலை உள்ளது. மீண்டும் அதே தற்காலிக இடத்தில் மாநகர பேருந்துகள், அரசு, தனியார் என நூற்றுக்கணக்கான பேருந்துகள் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர். எனவே, இந்த ஈரடுக்கு பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.