திருப்பூர், பிப்.3 - திருப்பூர் புத்தகத் திருவிழாவிற்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். ரூ.1 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையானது. அடுத்த வருட கண்காட்சிக்கான ஏக்கத்துடன் 21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஞாயிறன்று நிறைவடைந்தது. தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் நடத்திய 21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2025, கடந்த ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி 11 நாட் கள் நடைபெற்றது. ஆரம்ப விதை திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து திருப்பூ ரில் புத்தகக் கண்காட்சியை நடத்த தொடங்கினர். முதன்முதலில் டவுன் ஹால் அரங்கில் நடத்தப்பட்டது. திருப் பூர் மக்கள், பல்வேறு தொழில் வர்த் தக மற்றும் கல்வி நிறுவனங்களின் பிர முகர்கள் அளித்த உற்சாக வரவேற்பு நம்பிக்கை ஏற்படுத்தியது. அத்துடன் இந்த புத்தகக் கண்காட்சிக்கு வருகை தரும் புத்தக வெளியீட்டாளர்கள், விற் பனையாளர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. எனவே டவுன்ஹாலில் இருந்து மங்க லம் சாலை கே.ஆர்.சி. சிட்டி சென்ட ருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 40, 50 என்ற எண்ணிக்கை யில் அமைக்கப்பட்ட அரங்கங்கள், இங்கே 100 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் மாலை நேர சிந்தனைக் கருத்தரங்கங்களும் திருப் பூர் மக்களின் ஆதரவைப் பெற்றன. வாசிப்புப் பழக்கமே நோக்கம் புத்தகக் கண்காட்சி நடத்துவதன் நோக்கம், திருப்பூர் சமூகத்தில் புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கி நிலைபெறச் செய்வதே ஆகும். குறிப்பாக சிறார்கள், மாணவ, மாணவி கள் உள்ளிட்ட இளைஞர்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தினால் அது சிறந்த எதிர்கால சமூகத்தின் அச் சாணியாகத் திகழும் என்பதால் அவர் களை ஈர்க்கத் திட்டமிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக் கியத் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப் பட்டன. தொடக்கத்தில் ஜெய்வாபாய் பள்ளி ஒரே மையத்தில் நடத்தப்பட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். எதிர்பார்த்தது போலவே கலை இலக்கி யத் திறனாய்வு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், சிறார்கள், தங் கள் பெற்றோருடன் புத்தகக் கண்காட்சி களுக்குப் பெருமளவு வருகை தந்த னர்.
அதிகரித்த மக்கள் ஆதரவு
ஆண்டுக்கு ஆண்டு ஒவ்வொரு விச யமாகப் புதுமை புகுத்திய நிலையில் புத்தகக் கண்காட்சி, திருப்பூர் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக மலர்ந்தது. எனவே திருப்பூர் புத்தகத் திருவிழா என்று பெயர் மாற்றம் பெற்றது. அவ் வப்போதைய சூழலுக்கு ஏற்ப புத்தகத் திருவிழா நடத்துவதற்கான இடத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே காங்கேயம் சாலை பத்மினி கார்டன் மைதானத்திற்கு மாற்றப்பட் டது. நகரின் மையப் பகுதியில் இருந்த டவுன்ஹாலிலும், பின்னர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரிலும் நடத்திய நிலை மாறி, சற்றுத் தொலைவில் இடமாற்றம் செய் திருப்பதால் பார்வையாளர்கள் வருகை குறையுமோ என்ற ஐயப்பாடு இருந்தது. ஆனால் அந்த ஐயம் தேவை யில்லாதது என்பதை மக்களின் அதி கரித்த வருகை நிரூபித்தது. அரசுடன் இணைந்து இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு திமுக அரசுப் பொறுப் பேற்ற பிறகு மாவட்டந்தோறும் புத்த கத் திருவிழாக்கள் நடத்துவதாக அறி வித்தது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசுடன் இணைந்து திருப்பூர் பின் னல் புக் டிரஸ்ட் தனது பணியைத் தொடர்ந்தது. கடந்த மூன்று ஆண்டுக ளாக காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் இந்தத் திரு விழா நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் 11 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகி இருப்ப தாக பின்னல் புக் டிரஸ்ட் உறுப்பினர் கள் தெரிவித்தனர். இது சாதாரணமான விஷயமல்ல. குறிப்பாக திருப்பூரில் தொழில், வருமான நெருக்கடி அதிகரித் துள்ளது. இந்த சூழ்நிலையிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர், இது திருப் பூர் மக்கள் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியிருக்கிறது என்ப தையே இது மெய்ப்பிக்கிறது. ஒரு சோறு பதம்! புத்தகத் திருவிழா நடத்துவதன் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா என்று இந்த 21 ஆண்டு கால அனுபவத்தை உர சிப் பார்த்தால் நம்பிக்கை ஏற்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெண் கள் என சமூகத்தின் பல்வேறு பகுதியி னர் புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல் லும் போது ஒவ்வொருவர் கைகளிலும் புத் தகப் பை இருந்ததைக் காண முடிந்தது. ஒரு புத்தக அரங்கத்தில், திருக்குறள் ஒப்புவித்தால் புத்தகம் பரிசு என்று அறி வித்தனர். 11 நாட்களில் 1200 பேர், குறைந்தது 10 திருக்குறள்களை ஒப்பு வித்து புத்தகம் பரிசு பெற்றுச் சென்ற னர். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்!
அறிவார்ந்த சமூகம்
காலை நேர நிகழ்வு ஆயிரக்கணக் கான மாணவர்களுக்கு அறிவியல் கல் விச் சுவையூட்டி, அறிவுச்சுடர் ஏற்றியது என்றால் மிகையல்ல. மாலை நேர கருத்தரங்குகள் அறிவுச் சுரங்கமாக இருந்தது. புத்தக வாசிப்பின் மகத்துவத் தையும், செழுமையான தமிழ்ச் சமூகத் தின் பண்பாட்டையும், இலக்கியத்தை யும் அறிந்து கொள்ளவும், அது சார்ந்த புத்தகங்களைத் தேடி வாசிக்கவும் தூண்டியது. வழக்கம் போல் புத்தகத் திருவிழாவின் கடைசி நாளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்தாண்டும் அலைமோதியது. புத்தகங்களை அள் ளிச் சென்றனர். திருப்பூர் மக்களின் வெற்றி நிறைவு நாளில் பட்டிமன்றத்திற்குத் தலைமை ஏற்ற பேராசிரியர் கு.ஞானசம் பந்தன் பேசியபோது, “ஆண்டுக்கு ஆண்டு புத்தகத் திருவிழாவை மென் மேலும் சிறப்பாக நடத்தி வருகிறீர்கள். இனி இங்கே ஒரு நிரந்தரப் புத்தகக் கண்காட்சியை நடத்துங்கள். இங்கே முடியாவிட்டால், வேறு எங்கே முடி யும்?! என்றார். அந்தளவுக்கு வெற்றிகர மாக நடைபெற்றிருக்கும் புத்தகத் திரு விழா, தமிழகத்தில் தனி முத்திரை பதித்த புத்தகத் திருவிழாவாக உள்ளது. அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தாண்டு புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது. திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் முன்னெடுத்ததாக இருந்தாலும் ஊர் கூடித் தேர் இழுக்கிறார்கள் என்பதே திருப்பூர் புத்தகத் திருவிழாவின் சிறப்பாகும். எனவே இந்த விழாவின் வெற்றி திருப்பூர் சமூகத்தின் வெற்றி, திருப்பூர் மக்களின் வெற்றி. - வே.தூயவன்