எழுத்தாளர் மு.முருகேஷ் பேச்சு தருமபுரி, செப்.13- இலக்கியங்கள் சமூகத்தை பண்படுத்து கிறது. மேலும், பழுதுபட்ட மனிதனை புத்த கங்கள் பண்படுத்துவதாக தருமபுரி புத்தக திருவிழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத் தாளர் முருகேஷ் தெரிவித்தார். தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்று வரும் புத்தகதிருவிழாவில் செவ்வாயன்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராம தாஸ் தலைமை வகித்தார். தகடூர் நற்பணி மன்ற நிர்வாகி பிறைசூடன் முன்னிலை வகித் தார். சிறப்பு அழைப்பாளராக செந்தில் மெட் ரிக் பள்ளியின் நிர்வாக அதிகாரி சக்திவேல், தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் செந்தில், தலைவர் ஆர்.சிசுபாலன், தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கண்ணன், அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் சின்ன சாமி, கவிஞர் தமிழ்தாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் “எழுத்தே வாழ்க்கை” என்ற தலைப் பில் கீரனூர் ஜாகிர் ராஜா உரையாற்றி னார். இதன்பின் “பேசத் துடிக்கும் புத்தகங் கள்” என்ற தலைப்பில் ராஜ புரஸ்கர் விருது பெற்ற முருகேஷ் பேசுகையில், பழங்காலத் தில் மனிதன் வாழ்க்கை நிகழ்வுகளை குகை களிலும், பாறைகளிலும் ஓவியமாக வரைந் தான். அதன்பின்பு ஓலைச்சுவடிகளில் எழுதி னான். நவீன காலத்தில் தற்போது புத்தகம் அச்சிடப்படுகிறது. மனிதன் சிந்தனையை ஒரு மைப்படுத்தவும், பண்படுத்தவும் புத்தகங்கள் உதவுகின்றன. எனவே நாம் புத்தகத்துடன் உருவாக வேண்டும். இலக்கியம் சமூகத்தை பண்படுத்துகிறது. பழுதுபட்ட மனிதனை பண் படுத்துகிறது. விஞ்ஞானம் வளர வளர மனி தன் புத்தகத்தை விலக்கிவிட்டு, தொலைக் காட்சிக்கு சென்றான். தொலைகாட்சி சுய சிந் தனையை மழுங்கடிக்கிறது. புத்தகம் படிப்ப தால் மட்டுமே கண்முன் காட்சியை நிறுத்தும் கற்பனைக்கு கொண்டு செல்லும். சுயசிந்தனைக்கும், கற்பனைக்கும் புத்த கம் வழிவகுக்கும். ஆறரை கோடி மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில், 50 லட்சம் பேர் தான் நாளிதழ்களை வாசிக்கின்றனர். குறிப்பாக, கொரோனா காலத்தில் வாசிப்பு குறைந்து விட்டது. மூன்றரை கோடி மக்கள் வசிக்கும் கேரளாவில், 3 கோடி மக்கள் நாளிதழ் வாசிக் கின்றனர். எனவே, குழந்தைகளுக்கு பிறந்த நாளில் புத்தகத்தை வாங்கி கொடுக்க வேண் டும், என்றார்.