districts

img

காஷ்மீரை சிதைக்கும் மசோதா சொல்கிறது மத்திய அரசின் சட்டமே இறுதியானது; துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம்

புதுதில்லி, ஆக.6- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அர சியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதுடன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை முற்றிலுமாக சிதைக்கும் நோக்கத்துடன், அதனை இரண்டாகப் பிரிக்கவும், மத்திய பாஜக அரசு மசோதா கொண்டு வந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவை, மாநிலங்களவை யில் நிறைவேற்றியுள்ள மோடி அரசு, மக்களவையிலும் தாக்கல் செய்துள் ளது. இந்த மசோதாவில் இடம்பெற் றுள்ள அம்சங்கள் வருமாறு: ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டு யூனியன் பிர தேசங்களாக பிரிக்கப்படும். சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிர தேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல் படும். சட்டப்பேரவை இல்லாத யூனி யன் பிரதேசமாக லடாக் செயல்படும். லடாக்கை துணை நிலை ஆளுநர் ஆட்சி செய்வார். லடாக் யூனியன் பிரதேசத்தில் ‘லே’ மற்றும் கார்க்கில் பகுதிகள் இணைகின்றன. தவிர, ஜம்மு - காஷ் மீரின் இதர சில பகுதிகள் லடாக்கில் இணைகின்றன. இவற்றைத் தவிர மீதமுள்ள பகுதிகள் பிரிவினைக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரிலேயே தொடரும். ஜம்மு - காஷ்மீரின் 6 மக்கள வைத் தொகுதிகளில், 5 ஜம்மு - காஷ்மீரிலேயே தொடரும். ஒன்று மட்டும் லடாக்கில் இடம்பெறும். தேர்தல் ஆணையம், இவ்விரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு சேர தேர்தல் நடத்த முடியும். இந்த மசோதா மூலம், ஜம்மு மற் றும் காஷ்மீரின் மொத்த சட்டப் பேரவை தொகுதிகள் 107-இல் இருந்து 114-ஆக உயர்த்தப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரதி நிதித்துவப்படுத்திய மாநில சபையின் நான்கு உறுப்பினர்களும், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்படு வார்கள். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் இனி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான உயர்நீதிமன்றமாக அமையும். சட்டமன்றம், ஜம்மு- காஷ்மீர் யூனி யன் பிரதேசத்தின் முழு அல்லது எந்த பகுதிக்கும் மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விஷயத்திற்கும் சட்டங்களை உரு வாக்கலாம், ஆனால், “பொது ஒழுங்கு” மற்றும் “போலீஸ்” ஆகி யவை மத்திய அரசின் சார்பில் நிய மிக்கப்பட்டுள்ள துணைநிலை ஆளு நரின் கட்டுப்பாட்டில் இருக்கும். நாடாளுமன்றத்தால் உரு வாக்கப்பட்ட சட்டங்களுக்கும் சட்ட மன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கும் இடையில் முரண் பாடுகள் இருந்தால், முந்தைய சட்டம் மேலோங்கி, சட்டமன்றத்தால் செய்யப்பட்ட சட்டம் வெற்றிடமாக இருக்கும். இந்த மசோதா ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்க ளுக்கு பொதுவான துணைநிலை ஆளுநரைக் கொண்டிருக்கும். தற்போதுள்ள ஜம்மு-காஷ்மீர் ஆளுநரான சத்ய பால் மாலிக், பொது வான துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொள்வார். தேவைப்பட்டால்- சபையை ஒத்தி வைக்கவும், சட்டமன்றத்தை கலைக் கவும் துணைநிலை ஆளுநருக்கு அதி காரம் உள்ளது. முதல்வரை, துணை நிலை ஆளுநர் நியமிக்க வேண்டும், மற்ற அமைச்சர்களையும் முதல்வ ரின் உதவியுடன் ஆளுநரே நியமிப் பார். இவ்வாறு மசோதாவில் கூறப் பட்டுள்ளது.