நாமக்கல், நவ.15- பள்ளிபாளையம் அருகே அரசு பேருந்தின் பின்பகுதி உடைந்து தொங் கியதால் பயணிகள் அச்ச மடைந்தனர். ஈரோட்டில் இருந்து குமா ரபாளையம் நோக்கி கே-1 என்ற அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சுமார் 40-க்கும் மேற் பட்ட பயணிகளுடன் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே அப்பேருந் தானது வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பின் பகுதி உடைந்து தொங்கியது. பேருந் தின் பின்புறம் சத்தம் கேட்பதை அறிந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு பார்க்கையில், பேருந்தின் பின்பகுதி இரண்டாக உடைந்து தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். இதனையடுத்து, அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் பேருந் தின் பின்பக்க பகுதி கயிறுகள் கொண்டு கட்டப்பட்டது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக் கப்பட்டனர். தரமற்ற முறையில் இயங்கும் பழைய அரசு பேருந்துகளை, முழுமையாக அப்புறப் படுத்தி விட்டு, பொதுமக்கள் பயணிக்க பாது காப்பான முறையில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டுமென தொடர்ந்து சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வரு வது குறிப்பிடடத்தக்கது. இந்நிலையில், பேருந்தின் பின்பகுதி திடீரென உடைந்து தொங்கிய சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.