districts

img

கலைஞரின் கனவு இல்லம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

ஈரோடு, ஆக.8- கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை என்பதுபோல, தாயகம் திரும் பியோர் சுமார் 700 குடும்பத்தினருக்கு பட்டா இல்லை என்பதால் கலைஞரின் கனவு இல்லம் கனவாகவே போய் உள் ளது. ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கிராம  ஊராட்சி எலவமலை கிராமம். இந்த  கிராமத்தின் 3 பகுதிகளில் உள்ள மக் கள், நீரோடைகளில் மூங்கில் போல வள ரும் நாணல் தண்டினை செதுக்கி, அவற் றைப் பறித்து காய வைத்து குச்சிகளாக வெட்டி ஒரு செமையாகக் கட்டிக் கொடுத்தால் ரூ.30 கூலியாகக் கிடைக் கும். பெரும்பாலோர்க்கு இதுதான் வேலை. அந்த குச்சியினை அளவாக வெட்டி துணி பைக்கு கைப் பிடியாகப் பயன்படுத்துவர்.  இவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வந்த போதும் அரசின் எந்த திட்டமும் இவர் களுக்கு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் வெங் கடாசலம் கூறுகையில், எலவமலை ஊராட்சியில் தாயகம் திரும்பியோர் சக்தி முருகன் நகர், முவேந்தர் நகர்,  கொங்காளம்மன் நகர் ஆகிய மூன்று  பகுதிகளில் உள்ளது. கடந்த 40 ஆண் டுகளுக்கு முன்னர் குடியமர்த்தப்பட் டுள்ளனர். கான்ட்ராக்டர் மூலம் நிலத்தை வாங்கி ரெப்கோ வங்கியில் குடிசையைப் போன்ற குடியிருப்பு அமைத்துக் கொடுக்கப்பட்டது. அப் பகுதிகளில் சாலை வசதி, தெரு விளக்கு  வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வச திகளை ஊராட்சி நிர்வாகம் மூலம்  செய்து கொடுத்துள்ளோம். கலைஞ ரின் கனவு இல்லம் என்ற அருமையான  திட்டம். தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. கலைஞரின் கனவு இல்லத் திற்கு உரிய பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணியில் நாங்களும் ஈடுபட் டுள்ளோம். ஆனால் சரியான பயனாளி கள் கிடைக்கவில்லை. சரியான பயனா ளிகள் இருந்தும் அத்திட்டத்தைப் பயன் படுத்த முடியவில்லை. அதன் மூலம் பயன்பெற தாயகம் திரும்பிய மக்கள் தகுதியானவர்கள் தான். ஆனால் அவர் களுக்கு பட்டா இல்லை என்ற காரணத் தால் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற இயலவில்லை. அதற்கு தடையாக வழக்குகள் இருக்கிறது. இதனை அர சின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம் என்றார்.