உடுமலை, ஜூலை 11- ஆலாம்பாளையம் ஊராட்சி, பவள புரம் குடியிருப்பு அருகே சமூக விரோதி களின் செயல்களால் முள் வைத்து அடைக்கப்பட்ட பேருந்து நிறுத்த கட்டி டத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட் டம், ஆலாம்பாளையம் ஊராட்சி, பூசாரி நாயக்கர் குளம் பகுதி, பவளபுரம் குடி யிருப்பில் தனிநபரின் நிதி உதவியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகை யில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட் டது. இதை சமூக விரோதிகள் மது அருந் தும் கூடாரமாக மாற்றியுள்ளனர். இதனை தடுக்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம், காவல்துறை என அனைத்து தரப்பினரிடமும் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதால், நிழற்குடை கட்டி டத்தை முள் வைத்து அடைத்துள்ள னர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், உடுமலை, திரு மூர்த்தி மலை மற்றும் அமராவதி அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி குழந் தைகள், தொழிலாளர்கள் என பலர் சென்று வருகின்றனர். இப்பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் அமருவதற்காக, ஒருவர் தன் மகன் நினைவாக, இங்கு நிழற்குடை கட்டி கொடுத்தார். ஒரு வருடம் முறையாக பராமரிக்கப்பட்ட இந்த நிழற்குடை, கடந்த சில வருடங்களாக சமூக விரோ திகள் கூடாரமாக மாறிவிட்டது. மது அருந்துவது, பாட்டிலை உடைத்து இங் கேயே வீசுவது, இவ்வழியாக வரும் பெண்களை தகாத வார்த்தைகளில் பேசு வது என்பது தொடர்கிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், பேருந்து நிறுத்த கட்டி டம் கடந்த வருடம் முள் வைத்து அடைக் கப்பட்டது. காவல்துறை உரிய ரோந்து பணிகளை மேற்கொண்டு, சமூக விரோ திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிழற்குடையை மீண் டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும், என்றனர்.