நொடிப்பொழுதில் 100 புகைப்படங்களை எடுத்துத்தள்ளும் அளவிற்கு நவீன கருவிகள் வந்து விட்டன. என்றாலும், கல்யாணம் தொடங்கி காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா என மனம் மகி ழும் பிறந்தநாள் கொண்டாட் டங்கள் வரை தொழில்முறை புகைப்படக் கலைஞர்களின் பங் களிப்பு சமூகத்தில் மிகப் பெரிய தாக உள்ளது. பெருநகரங்களில் புகைப்படக் கலை இன்று பல்வேறு தொழில் நுட்ப வசதிகளுடன் உச்சத்தைத் தொட்டாலும், கிராமங்களில் இன் றைக்கும் சிறிய அளவிலான வசதி களுடன் திருமணம் உள்ளிட்ட முக் கிய நிகழ்வுகளை பதிவு செய்யும் புகைப்படக்காரர்கள் மத்தியில் யாருடைய உதவியுமின்றி சவா லான வாழ்க்கையை எதிர் நீச்சல் அடித்து அசத்தி வருகிறார் சத்திய பாமா. சேலம் மாவட்டத்தின் கடைக் கோடி பகுதியான தீவட்டிப்பட்டி அருகேயுள்ள நாச்சனம்பட்டி யைச் சேர்ந்த 60 வயதான சத்ய பாமா. தொழில்முறை புகைப்படக் கலைஞராக தொடர்ந்து உற்சாகத் துடன் பணியாற்றி வருகிறார். கண வரின் திடீர் மரணத்தால் வறுமை யின் பிடியில் சிக்கிய சத்யபாமா, கணவரின் தொழிலான புகைப் படம் எடுக்கும் பணியையே,
தனது பாதுகாப்பு கேடயமாக மாற்றிக் கொண்டார். வறுமையின் பிடியில் சிக்கிய சத்யபாமா எடுத்த முடிவு அவரை சிறந்த சாதனையாளராக மாற்றி இருக்கிறது. கணவரின் தொழிலை தொடர்ந்து மேற் கொண்டு தன்னுடைய குடும்பத் தினை வறுமையின் பிடியிலிருந்து மீட்டதாக கூறுகிறார் சத்யபாமா. சுப நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, தீவட்டிப்பட்டி காவல்நிலைய எல் லைக்குட்பட்ட பகுதியில் நிகழும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற நிகழ்வுகளை புகைப்படம் எடுப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறார். தொழில்முறை புகைப் படக் கலைஞராக கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக பணியாற்றி வரு கிறார். காலத்தை உறைய வைக்கும் சக்தி புகைப்படக் கலைஞர்க ளுக்கு உண்டு. நினைவுகளை நிஜம் போல காட்டும் புகைப்படங் கள் ஒவ்வொருவருக்கும் பொக்கி சங்களாக உள்ளன. வாழ்க்கை யில் வரும் சோதனைகளை, சாத னைகளாக மாற்றும் சாமானியர் கள் வரிசையில் 60 வயதிலும் அச ராமல் புகைப்படம் எடுக்கும் இந்த சத்யபாமாவும் திகழ்கிறார் என் றால் அது மிகையல்ல. இத்தகைய வறுமையில் சாதிக் கும் இவருக்கு, அரசு மற்றும் தன் னார்வ நிறுவனங்கள் உதவி செய்து தொழிலை விரிவுபடுத்த வும், சொந்தமாக ஒரு இடத்தில் வீடு அமைத்து வாழ வழி வகை செய்ய வேண்டும் என சத்தியபாமா அரசுக்கு கோரிக்கை விடுத்துள் ளார். -எழில், சேலம்.