எலச்சிபாளையம், மார்ச் 11- ஊராட்சி ஒன்றிய சேர்மன் அலுவலகத்தை அதிமுகவினர் கட்சி அலுவலகமாக பயன்படுத்துவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சேர்மன் ஜெயசுதாவுக்கு தனி அலுவலகம் உள்ளது. இந்நிலையில், ஒன்றிய சேர்மன் இல்லாத நேரத்தில் அவரது கணவர் சக்திவேல் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கட்சி அலுவ லகம் போல் செயல்பட்டு வருகின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் சுரேஷ் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் புஷ்ப ராஜூடம் புகார் தெரிவித்தார். ஆனால், அதிமுக பிரமு கர்கள் தொடர்ந்து அலுவலகமாக பயன்படுத்தி வருகின் றனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை ஏற்றார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிட்டுசாமி, மாரிமுத்து உள்ளிட்ட திரள னோர் கலந்து கொண்டனர்.