தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 24 மணி நேர தர்ணா போராட்டம் நிறைவடைந்தது
திருப்பூர், பிப்.11- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் சார்பில் நடைபெற்று வந்த 24 மணி நேர தர்ணா போராட்டம் செவ்வா யன்று நிறைவடைந்தது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி தலைமையில் திங்களன்று காலை தொடங்கிய 24 மணி நேர தர்ணா போராட் டம் செவ்வாயன்று காலை வரை நடை பெற்றது. இந்த போராட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழி யர்களுக்கு அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை அகவிலைப்படி நிலு வைத் தொகை, நிறுத்தி வைக்கப்பட் டுள்ள சரண் விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் இளைஞர்களுக்கு காலமுறை ஊதிய நடைமுறையில் பணி வழங்க வேண்டும். முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த சத்து ணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டது. திங்களன்று காலை தொடங்கி செவ் வாயன்று காலை வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில், சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். கோரிக் கைகளை அரசு நிறைவேற்றும் வரை அடுத்த கட்ட போராட்டங்களில் நடத்த வுள்ளோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநில தலைமை அறிவிக்கும் என தெரிவித்து, போராட்டத்தை நிறைவு செய்தனர். இதில், சிஐடியு மாநிலச் செய லாளர் கே.சி.கோபிகுமார் வாழ்த்தி பேசி னார். அரசு ஊழியர் சங்கத்தின் முன் னாள் மாநிலச் செயலாளர் நிசார் அகமது நிறைவு செய்து வைத்து பேசினார்.
காலிபிளவர் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு திருப்பூர்,
பிப்.11- தென்னம்பாளையம் சந்தைக்கு காலிபிளவர் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு குறைந்துள்ளது. இருப்பினும் வியாபாரம் சரிவர ஆகவில்லை என காலிபிளவர் வியாபாரி கள் தெரிவித்தனர். திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக் காக கொண்டு வரப்படுகிறது. இங்கு திருப்பூர் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காலிபிளவர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த வாரங்களை விட காலிபிளவர் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து காலிபிளவர் வியாபாரிகள் சிலர் கூறுகை யில், தாளவாடி பகுதியில் இருந்து காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மொத்த விலையில் 20 காலிபிளவர் பூக்கள் கொண்ட பை 250 ருபாய்க்கும், சில்லறை விலையில் ஒரு காலிபிளவர் 15 முதல் 20 ருபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான வியாபா ரிகளும் காலிபிளப்வர் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால் விலை குறைந்திருந்தாலும், எதிர்பார்த்த வியாபாரம் ஆகவில்லை என தெரிவித்தனர்.
பிப்.18, 19 ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் திருப்பூர்,
பிப்.11- தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் எல்&டி ஷிப் பில்டிங் லிமிடெட் சார்பில் திருப்பூரில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக் கான வேலைவாய்ப்பு முகாம் பிப்.18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கடல் சார் வாரியம் மற்றும் எல்&டி ஷிப் பில்டிங் லிமிடெட் உடன் இணைந்து துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் திருப்பூர் மாவட் டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில், தேர்வு செய்யப்படுபவா்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் திறன் பயிற்சி அளித்து எல்&டி ஷிப் பில்டிங் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வெல்டர், பிட்டர், எலெக்ட்ரீஷியன், மெஷினிஸ்ட், டர்னா், டூல் அண்ட் டை மேக்கர் ஆகிய தொழிற் பிரிவுகளைச் சேர்ந்த ஐடிஐ பயிற்சியாளர்கள் பங்கேற்கலாம். இம்முகாம் திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் தில் பிப்.18 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் தில் பிப்.19 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறுகிறது. எனவே, ஐடிஐ தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் எனக் கூறப் பட்டுள்ளது.