நாமக்கல், ஜூன் 26- தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் மீது கொடூர தாக்குதல் தொடுத்த ஆதிக்க சாதியினர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பாதிக்கப்பட்ட குடும் பத்தினருடன் சென்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜங்கமநாயக்கன் பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த வர் ஆனந்தகுமார் (30). ஜேசிபி ஓட்டுந ரான இவர் தனது மகளுக்கு பால் வாங்க சென்ற போது, பொதுப்பா தையை மறித்து பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு மினி ஆட் டோவை நிறுத்தியுள்ளனர். இதனை கண்ட ஆனந்தகுமார் பொதுவழி யில் செல்ல முடியாமல் ஏன் வாக னத்தை நிறுத்தினீர்கள்? என கேட்டுள் ளார். அதற்கு குச்சிபாளையம் பகுதி ஆதிக்க சாதியைச் சேர்ந்த பிரபாக ரன் (30), குமார் (25) ஆகியோர், வண் டியை எடுக்க முடியாது என்று அதிகார தொணியில் பேசியும், சாதியைக்கூறி தகாத வார்த்தைகளால் மிரட்டி, ஆனந்த குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், பிரபாகரனின் நண்பர்களான செல்வகணபதி, தனுஷ், ரங்கசாமி ஆகி யோர் ஆனந்தகுமாரை தூக்கிச் சென்று தாக்கியுள்ளனர். ஆயுதங் களை கொண்டு தாக்கியதில் இடது கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் ஆனந்தகுமார் கத் திய போது, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தற்போது ஆனந்தகுமார் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னையடுத்து ஆனந்தகுமார் குடும்பத் திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண் டும். தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதி யைச் சேர்ந்த 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய லாளர் கே.தங்கமணி தலைமையில், ஆனந்தகுமாரின் மனைவி மணிமே கலை மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினரும், எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலருமான சு.சுரேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்ட செயலாளர் கே.தங்க மணி, மாவட்ட தலைவர் எம்.கணேச பாண்டியன் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்தகுமாரை நேரில் சந் தித்து ஆறுதல் கூறினர்.