districts

img

தேர்தல் நடத்தை விதிமுறையால் ஜவுளிகள் விற்பனை பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரா ளமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உற் பத்தி செய்யப்படும் ஜவுளித்துணிகள் ஈரோடு ஜவுளி சந்தை வழியாக மாநிலத்தின் பல்வேறு  பகுதிகளுக்கும் செல்கிறது. மேலும், பிரதி திங் கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வடமாநில வியாபாரிகள் ஈரோடு ஜவுளி சந் தைக்கு வருகை தந்து மொத்தமாக ஜவுளிகளை கொள்முதல் செய்து வருகின்றனர். பணம், ஜவுளிகள் பறிமுதல் இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19  ஆம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக ஜவுளி விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் காவிரி ஆற்று  பாலத்தில் இருந்து எதிர்புறம் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதியான கருங் கல்பாளையம் பகுதியில் தேர்தல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படை யினர் பறிமுதல் செய்கின்றனர். மேலும், விசைத் தறி கூடத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு, ஈரோடு ஜவுளி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது உரிய ரசீது இல்லை எனக்கூறி ஜவுளிகளையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யும் நிகழ்வும் நடை பெற்று வருகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்கின்ற முடி வுக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வந்துள்ளனர். இதன் காரணமாக ஜவுளி ஏற்று மதி பாதிக்கப்படுவதோடு, ஜவுளிகள் விற்பனை தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அச்சத்தில் ஜவுளி வியாபாரிகள்

இதுகுறித்து பள்ளிபாளையத்தில் இருந்து  ஈரோட்டுக்கு ஜவுளிகளை கொண்டு சென்று  விற்பனை செய்து வரும் ஜவுளி விற்பனையா ளர் ரமேஷ் என்பவர் கூறுகையில், பொதுவாகவே ஈரோடு வழியாக ஜவுளிகளை கொண்டு செல் லும் பொழுது வழக்கமாக வணிகவரித்துறை அதி காரிகள் நின்று கொண்டு ஜவுளிகளுக்கு உரிய ரசீது ஆவணங்கள் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோதாது என்று தற் போது கூடுதலாக தேர்தல் பறக்கும் படையின ரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதால், தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சொந்த முதலீட்டைக் கொண்டு ஜவுளி களை வேறொரு பக்கம் இருந்து வாங்கி, அதை ஈரோடு ஜவுளி கடைக்கு கொண்டு சென்று அதில் கிடைக்கும் சிறிய அளவிலான லாபத்தில் குடும் பத்தை கவனித்து வரும் நிலையில், தற்போது எங்கே ஜவுளிகளை எடுத்துச் சென்றால் பறக்கும்  படையினர் பிடித்துக் கொள்வார்களோ? என்ற  அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிபாளையம், குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதுமே சிறு குறு தொழில் நடத்துபவர்கள் அதிகம் உள்ள பகுதி களாகும். ஜவுளிகள் மட்டுமின்றி காய்கறிகள் விற்பனை உள்ளிட்ட பிற தொழிலுக்கும் இது பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஜவுளிகளை கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு, அந்த பணத்தினை கொண்டு வருவதற்கும் அச்சமாக உள்ளது. தேர்தல் ஆணையம் 50  ஆயிரம் ரூபாய்க்கு மேல் கையிருப்பில் ஆவ ணங்கள் ஏதுமின்றி பணம் இருந்தால் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறுகிறது. பொதுவாகவே ஜவுளித்தொழிலில் மிக சாதாரணமாகவே ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம்  புழங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அப்படி இருக்க இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் மக்களுக்கும் சிறிய அளவில் தொழில் நடத்தும் வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

தொழிலுக்கு ஏற்ப தளர்வு

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த தொழில் நகரத்தின் சூழலுக்கு ஏற்ப ஒரு சில தளர்வுகளை ஏற்படுத்தினால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். இல்லையேல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறையால் அனைத்து தரப்பினரும் சொல் லண்ணா துயரத்திற்கு ஆளாவார்கள். ஏற்க னவே 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த மோடி அரசு ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, தொழில்வரி, மூலப் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என பல்வேறு தாக்குதல்களை தொடுத்துள் ளது. தற்போதைய தேர்தல் பறக்கும் படை அதி காரிகளால் மேலும் தொழில் பாதிக்கப்பட்டு வரு கிறது. மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது பணத்தை மறைத்துக் கொண்டு செல்பவர்கள் யார்? சிறு குறு தொழில் நடத்தும் நபர்கள் யார்? என்பதை முதலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக சாலையில் செல்லும் அனைவரையுமே பிடித்து சோதனை செய்கின்ற னர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறக்கும் படை யால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவ ணங்களை ஒப்படைத்தால் உடனடியாக பணத்தை திரும்ப ஒப்படைக்கப்படும் என அதி காரிகள் சொல்கின்றனர். அதேபோன்று பணத்தை தந்து விடுகின்றனர். ஆனால், ஆவ ணங்கள் இல்லாமல் நடைபெறும் இது போன்ற  சிறுசிறு வியாபாரிகளிடம் புழங்கும் பணம் பறக் கும் படையினரால் கைப்பற்றப்பட்டால் என்ன செய்வது என்றே தெரியாமல் விழிக்கிற நிலை தான் உள்ளது. வாக்குக்கு பணம் கொடுக்க கோடிக் கணக்கான ரூபாய்களை கையில் வைத்துக் கொண்டு அலையும், அரசியல்வாதிகளை விட்டு விட்டு, அன்றாடம் காய்ச்சியாக வாழ்வாதா ரத்தை பாதுகாக்க தொழிலில் ஈடுபடுவோரிடம் புழங்கும் பணத்தை பறிப்பது எந்த வகையி லும் ஏற்க முடியாது. ஈரோடு மாட்டுச் சந்தைக்கு அதிகளவு வியா பாரிகள் மற்றும் விவசாயிகளை மாடுகளை வாங்க விற்க வருகை தருவார்கள். இந்த தேர்தல்  நடத்தை கெடுபிடியால் தற்போது அவர்களும் மாட்டுச்சந்தைக்கு வருவதை நிறுத்திவிட்டனர். அப்படி வரும் மாட்டுச்சந்தை வியாபாரிகளிட மும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் ஏதுமில்லை எனக்கூறி பணத்தை பறிமுதல் செய்த நிகழ்வும் நடைபெற்று உள் ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய வழி காட்டுதலை கொடுத்து சிறு, குறு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

-நாமக்கல் பிரபாகரன்