கோவை, பிப்.9- மலக்குழியில் விஷவாயு தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த விவகா ரத்தில், சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வலி யுறுத்தி, முற்போக்கு அமைப்புகள் சார்பில் கோவை மாநகர காவல் துறை யில் மனு அளித்தனர். கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த வர் மோகனசுந்தரம். இவர் சவுரிபாளை யம் பகுதியில் உள்ள அஸ்வினி என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் பணியில் குணா மற்றும் ராமு என்ற இரு தொழிலாளர்களுடன் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென விஷவாயு வெளியேறவே, மோகன சுந்தரம் மற்றும் அவருடன் வந்த குணா, ராமு என மூவரும் மயமடைந்துள்ள னர். இதனையடுத்து, மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மோகனசுந்தரம் உயரிழந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த மோகன சுந்தரத்தின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் உரிய நிவாரண வழங்கப்பட வேண்டும். அவரது மனைவிக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். மேலும் செப்டிக் டேங்கிற்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள அறி வுறுத்திய அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் வன்கொ டுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என கோவை மாந கர காவல் ஆணையர் அலுவலகத் தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைத் தலைவர் யு.கே. சிவஞானம், மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, ஆதித்தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி, திராவிடர் சுயமரியாதை கழகத்தின் நேருதாஸ், சிபிஐ(எம்.எல்) சார்பில் லெனின் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.