districts

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்: ஆசிரியர்களை கேலிக்குள்ளாக்கக்கூடாது

திருப்பூர், நவ.22- உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பள் ளியை கள ஆய்வு செய்யலாம் என்பது,  ஆசிரியர்களின் பணியை கேலிக்குள் ளாக்கக் கூடாது என்று தமிழ்நாடு ஆரம் பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூறியுள் ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம் பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப் பூர் மாவட்டச் செயலாளர் பிரபு செபாஸ் டியன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: தற்போதையப் பள்ளி செயற்பா டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி  எதுவும் அறியாத தற்காலிக ஆசிரியர் களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம்  நியமிக்கின்றனர். இதனால்  மாணாக்கர் கள் முழுமையான கற்றல் அனுப வத்தை பெற இயலாது. மேலும் பல பள் ளிகளில் மாணாக்கர்களின் எண்ணிக் கைக்கேற்ப ஆசிரியர் நியமனம் இல்லை. அதேபோல் பல பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கென தனியே ஆசிரியர் நியமனம் இல்லை. பள்ளியின் தூய்மைப் பணிக்கு ஆட் கள் கிடைப்பது அரிதாக உள்ள நிலை யில், நியமிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளார்களுக்கான ஊதியம் மாத இறுதிநாளில்  வழங்குவதில்லை. மிகுந்த காலதாமதம் ஏற்படுவதால் தூய்மைப் பணி செய்வதில் சுணக்க மும், பணியாட்கள் மாறுகின்ற நிலையும்  ஏற்படுகிறது. மேலும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஹைடெக் லேபில்  பணியாற்ற பல பள்ளிகளில் ஆய்வகப் பொறுப்பாளர்கள் இல்லாத நிலை தொடர்கிறது. இதனால் நிரந்தர பதி வெண் (எமிஸ்) பதிவுகளை ஆசிரியர் களே செய்யும் நிலை தொடர்கிறது. பள்ளி பராமரிப்பு மானியங்களை கடந்த காலங்களில் வழங்கியதைப் போல ஒரே தவணையில் வழங்காமல்,  இரு தவணைகளாக  வழங்குவதால்,  பராமரிப்பு பணிகள் முழுமையடையா மலும், கூடுதல் பணி, கால விரயம் மற் றும் நடைமுறைச் செலவுகள் அதிக ரிக்கவும் செய்யுமென தெரிவிக்கின் றனர். இவ்வாறாக தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் மிகுந்த பணிச் சுமை யோடும், மன உளைச்சலோடும் பணி யாற்றி வருவதாக ஆசிரியர்கள் வேத னையுடன் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பள்ளிச் சூழலில், தற் போதைய அரசு கற்றல் - கற்பித்தலில் நடைமுறைப்படுத்தி வரும் நவீன மாற்றங்கள், மாதக் கணக்கில் நடை பெறும் கலைத் திருவிழா பணிகள், இலக்கிய மன்றப் பணிகள், பள்ளி மற் றும் வட்டார அளவிலான கலை, இலக் கியம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட போட்டிப் பணிகள், எஸ்.எம்.சி. பணி கள், பணியிடை பயிற்சிகள், இணைய வழி பயிற்சிகள், தேர்வுகள், மகிழ் முற் றம், ஸ்கவுட், ஜே.ஆர்.சி குழுப் பணிகள்,  தினசரி  பள்ளிப் பணிகள், காலை உணவு  திட்டம் உள்ளிட்ட மாணாக்கர் நலத்திட் டப் பயன்களை அனைத்து  மாணாக்கர்க ளிடமும் கொண்டு சேர்க்க காலம் நேரம்  பார்க்காமல் தலைமை ஆசிரியர்களும்,  ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் கட மையாற்றி வருகின்றனர். இந்நிலையில் எவர் வேண்டுமானா லும் பள்ளிக்குள் வரலாம், பார்வையிடலாம், ஆய்வு செய்யலாம்,  ஆசிரியர்களை கேள்வி கேட்கலாம், கூட்டமாக வந்து தாக்கலாம் என்பதோடு  பணியிடத்திலேயே ஆசிரியரை கொலையும்  செய்யலாம் என்ற நிலை  தற்போது ஏற்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பள்ளி களைப் பார்வையிட, கண்காணிக்க, ஆய்வு செய்ய வட்டார, மாவட்ட , மாநில  அளவில் நிரந்தர அலுவலர்கள் உள்ள  நிலையில்,பள்ளிகளின் நடைமுறை  பற்றி முழுமையாக அறியாதவர்களான  பல்வேறு அரசு துறைகளின் அலுவ லர்கள், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் “ திட்டத்தின் வழியே பள்ளிக ளைப் பார்வையிடல், கள ஆய்வு செய் தல், தரவுகளைக் கேட்டுப் பெறுதல் என் பதெல்லாம் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாகவும், மிகுந்த மனச்சோர்வை உண்டாக்குவதாகவும், பெரும்பாலான ஆசிரியர்கள் தெரி விக்கின்றனர்.  எனவே தொடக்கக் கல்வித் துறை யில் பணி செய்யும் ஆசிரியர்களின் சுய மரியாதையை கேலிக்குள்ளாக்காமல், ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது  உரிய தீர்வினைக் கண்டு, அமைதி யான, மகிழ்ச்சியான சூழலில் ஆசிரி யர்கள் கற்பித்தல் பணி மேற்கொள்ள உரிய நடவடிக்கையை அரசும், மாவட்ட  நிர்வாகமும் எடுத்து உதவ வேண்டும்.