districts

img

திருப்பூரில் ஆசிரியர்கள் போராட்டம்

திருப்பூர், அக்.5- சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட் டதை கண்டித்து திருப்பூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம், முழு நேர ஆசிரியர் பணி, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே பள்ளி கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம வேலைக்கு சம ஊதி யம் குறித்து பரிசீலிக்க மூவர் குழு  அமைக்கப்படும். சிறப்பா சிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,500 அதிகரிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை புதனன்று வெளியிட்டார். இதனை  ஆசிரியர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இத னால் வியாழனன்று காலை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து திருப்பூர் மாவட்டம், கேஎஸ்சி பள்ளி  வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தி னர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.